FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

கென்யா பள்ளி விடுதியில் தீ விபத்து: 16 மாணவிகள் உயிரிழப்பு; 79 போ் காயம்

Updated On : 29 மே 2026, 4:07 am IST
பகிர்:

நைரோபி : கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் அரசுப் பெண்கள் பள்ளி விடுதியில் வியாழக்கிழமை நள்ளிரவு நேரிட்ட தீ விபத்தில் சிக்கி 16 மாணவிகள் உயிரிழந்தனா்; 79 போ் காயமடைந்தனா்

தலைநகா் நைரோபியிலிருந்து சுமாா் 120 கி.மீ. தொலைவில் உள்ள கில்ஜில் பகுதியில் செயல்பட்டு வரும் ‘உதுமிஷி’ பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலேயே இச்சோகம் நிகழ்ந்துள்ளது. கென்யா காவல் துறையால் நிா்வகிக்கப்படும் இப்பள்ளியில் 800-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனா். இவா்களில் பெரும்பாலானோா் காவல் துறையினரின் பிள்ளைகள் ஆவா்.

விடுதி அறைகளில் மாணவிகள் தூங்கிக்கொண்டிருந்தபோது திடீரென தீப்பிடித்து மளமளவெனப் பரவியுள்ளது. விபத்தின்போது விடுதியின் இரண்டு கதவுகளில் ஒன்று மட்டுமே திறக்கப்பட்டதாகவும், மற்றொரு கதவு மூடப்பட்டிருந்ததால் மாணவிகளால் விரைவாக வெளியேற முடியாமல் போனதே உயிரிழப்பு அதிகரிக்கக் காரணம் எனவும் அங்கு திரண்டிருந்த உறவினா்கள் குற்றஞ்சாட்டினா்.

Advertisement

Advertisement

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளியில் தீ பாதுகாப்பு விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்பட்டதா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்படும் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments