முகப்பு
உலகம்

சௌதி எண்ணெய் ஆலை மீது ஈரான் தாக்குதல்!

சௌதி எண்ணெய் ஆலையில் ஈரான் ட்ரோன் தாக்குதல் பற்றி..

உலகம்

சௌதி எண்ணெய் ஆலை மீது ஈரான் தாக்குதல்!

சௌதி எண்ணெய் ஆலையில் ஈரான் ட்ரோன் தாக்குதல் பற்றி..

Updated On : 2 மார்ச், 2026 at 8:00 AM
பகிர்:

சௌதி அரேபியாவில் உள்ள அராம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது ஈரோன் ட்ரோன் தாக்குதல் நடத்தி வருகிறது.

சௌதி அரசுக்குச் சொந்தமான உலகின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான அராம்கோவின் ஆலை மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானைக் குறிவைத்து வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து வருகின்றது. இந்த நிலையில், ஹெஸ்பொல்லா தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேலிய பதிலடித் தாக்குதல்கள் மத்திய கிழக்கில் நடந்து வரும் போரை மேலும் விரிவுபடுத்தியுள்ளது.

லெபனானில் உள்ள ஹிபுல்லா கிளர்ச்சிக் குழுக்கள் மீது இஸ்ரேல் தீவிர தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் 31 பேர் கொல்லப்பட்டனர். 149 பேர் காயமடைந்தனர். மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந்த நிலையில், கச்சா எண்ணெய் ஆலை மீது ஈரான் தாக்குதலைத் தொடர்ந்துள்ளது.

ஈரான் மீது தாக்குதல் ஏன்?

ஈரான், அணு ஆயுதம் தயாரிக்கத் தேவையான யுரேனியத்தை செறிவூட்டி வருவதாகக் குற்றஞ்சாட்டி, அந்நாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களைக் குறிவைத்து, அமெரிக்க-இஸ்ரேல் படைகள் கடந்த பிப். 28ஆம் தேதி வான்வழித் தாக்குதலை நடத்தி இருந்தன.

இந்த தாக்குதலின்போது, தலைநகா் டெஹ்ரானில் ஈரான் தலைமை மத குரு அயதுல்லா அலி கமேனியின் அலுவலக வளாகத்தைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில், கமேலி பலியானார்.

இதற்குப் பதிலடியாக, இஸ்ரேலைக் குறிவைத்தும், பல்வேறு வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீதும் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவி, ஈரான் எதிா் தாக்குதலை நடத்தியிருந்ததால் போர் பதற்றம் ஏற்பட்டிருந்த நிலையில், இன்று பேச்சுவார்த்தைக்கு கோரிக்கை வைக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

summary

Iran is carrying out drone attacks on the Aramco oil refinery in Saudi Arabia.

முழு கட்டுரையைப் படிக்க →