முகப்பு
இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி (கோப்புப் படம்)
உலகம்

ஈரான் - இஸ்ரேல் போர்! வளைகுடா நாடுகளுக்கு வான் பாதுகாப்பு உதவிகள் வழங்கும் இத்தாலி!

ஈரான் படைகளால் தாக்கப்படும் வளைகுடா நாடுகளுக்கு இத்தாலி வான் பாதுகாப்பு வழங்குவது குறித்து...

உலகம்

ஈரான் - இஸ்ரேல் போர்! வளைகுடா நாடுகளுக்கு வான் பாதுகாப்பு உதவிகள் வழங்கும் இத்தாலி!

ஈரான் படைகளால் தாக்கப்படும் வளைகுடா நாடுகளுக்கு இத்தாலி வான் பாதுகாப்பு வழங்குவது குறித்து...

Updated On : 5 மார்ச், 2026 at 11:27 AM
இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி (கோப்புப் படம்)
பகிர்:

வளைகுடா நாடுகளுக்கு வான் பாதுகாப்பு உதவிகளை வழங்கவுள்ளதாக, இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி அறிவித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களால் ஈரானின் தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கமேனி, முக்கிய அதிகாரிகள் உள்பட 1,000-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

கடந்த பிப். 28 முதல் நடைபெற்று வரும் இந்தப் போரில் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள், கட்டமைப்புகள் மற்றும் இஸ்ரேல் ஆகிய பகுதிகளின் மீது ஈரான் படைகள் தொடர் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன. இதனால், மத்திய கிழக்கில் உள்ள வளைகுடா நாடுகளிடையே பதற்றமான சூழல் நிலவி வருகின்றது.

இந்த நிலையில், வளைகுடா நாடுகளுக்கு வான் பாதுகாப்பு உதவிகளை வழங்குவதாக, வியாழக்கிழமை (மார்ச் 5) அன்று இத்தாலி நாட்டின் பிரதமர் மெலோனி அறிவித்துள்ளார்.

இதுபற்றி, அவர் கூறியதாவது:

“பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியைப் போன்று வளைகுடா நாடுகளுக்கு உதவிகளை வழங்க இத்தாலி முன்வருகின்றது. நாங்கள் வான் பாதுகாப்பு உதவிகளைப் பற்றி கூறுகிறோம்.

அவர்கள் நம் நட்பு நாடுகள் என்பதற்காக மட்டுமல்ல, அப்பகுதிகளில் ஆயிரக்கணக்கான இத்தாலியர்கள் வசிக்கின்றனர். அங்குள்ள சுமார் 2,000 வீரர்களை நாம் பாதுகாக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

summary

Italy will provide air defense assistance to Gulf countries, PM Giorgia Meloni has announced.

முழு கட்டுரையைப் படிக்க →