கமேனிக்குப் பிறகு..! ஈரானின் மூத்த தலைவர் அலி லாரிஜானி கொலை?
ஈரானின் தேசிய பாதுகாப்புச் செயலாளர் அலி லாரிஜானி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு...
ஈரானின் தேசிய பாதுகாப்புச் செயலாளரும் அந்நாட்டின் மூத்த தலைவருமான அலி லாரிஜானி கொல்லப்பட்டதாக, இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதல்களில், ஈரானின் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இதையடுத்து, வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க கட்டமைப்புகள் மீது ஈரானின் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்த நிலையில், இஸ்ரேலின் தாக்குதல்களில், ஈரானின் தேசிய பாதுகாப்புச் செயலாளரும் அந்நாட்டின் மூத்த தலைவருமான அலி லாரிஜானி கொல்லப்பட்டதாக, இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை (மார்ச் 17) அறிவித்துள்ளது.
இருப்பினும், அலி லார்ஜானியின் மரணம் குறித்து ஈரான் அரசின் தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை.
ஒருவேளை உறுதி செய்யப்பட்டால், அயதுல்லா அலி கமேனிக்குப் பிறகு கடந்த பிப். 29 முதல் நடைபெற்று வரும் இந்தப் போரில் கொல்லப்பட்ட, ஈரானின் 2 ஆவது மிக மூத்த அதிகாரி அலி லாரிஜானி எனக் கூறப்படுகிறது.
ஆனால், இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்த சில நிமிடங்களில் அலி லாரிஜானியின் எக்ஸ் தளப் பக்கத்தில், அமெரிக்க தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானிய மாலுமிகளின் இறுதிச் சடங்கு குறித்த செய்தி வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.