ஈரான் கச்சா எண்ணெய் விநியோகத்துக்கு அனுமதி: அமெரிக்கா
ஈரான் கச்சா எண்ணெய் விநியோகத்துக்கு அனுமதி வழங்கியது அமெரிக்கா
கடலில் உள்ள ஈரானின் கப்பல்களிலிருந்து கச்சா எண்ணெய்யை விநியோகம் செய்ய அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது.
ஈரான் நாட்டின் கச்சா எண்ணெய் மீதான தடைகள் ஏப்ரல் 19-ஆம் தேதி வரை நிறுத்தி வைப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
நடுக்கடலில், ஈரானின் கப்பல்களில் ஏற்கனவே உள்ள கச்சா எண்ணெய், பிற பெட்ரோலிய பொருள்களை விநியோகிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஈரான் மீதான போர் தொடங்கி கடந்த இரண்டு வாரங்களில், ஈரானின் கச்சா எண்ணெய் விநியோகத்துக்கு அமெரிக்கா அனுமதி வழங்குவது இது மூன்றாவது முறையாகும்.