முகப்பு
உலகம்

தொடரும் போர்.. ஈரான் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது அமெரிக்க, இஸ்ரேலிய படைகள் தாக்குதல்!

ஈரானின் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது அமெரிக்க, இஸ்ரேலிய படைகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல்.

Updated On : 24 மார்ச், 2026 at 3:01 AM
ஈரான் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது அமெரிக்க, இஸ்ரேலிய படைகள் தாக்குதல்!
பகிர்:

ஈரானின் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது அமெரிக்க, இஸ்ரேலிய படைகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

அணுசக்தி கொள்கைகள் தொடர்பான பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாத நிலையில், கடந்த பிப். 28 ஆம் தேதி ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப்படைகள் கடும் தாக்குதல் நடத்தின. இந்தத் தாக்குதல்களால் ஆடிப்போன ஈரானின் உச்ச தலைவரான கமேனி கொல்லப்பட்டார். அதன் தொடர்ச்சியாக, பல ராணுவத் தலைவர்கள் கொல்லப்பட்டனர்.

ஈரானுக்கும் அமெரிக்கா - இஸ்ரேலுக்கும் நீடிக்கும் தொடர் சண்டைக்கு நேற்று (மார்ச் 23) தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அடுத்த ஐந்து நாள்கள் ஈரான் மீது தாக்குதல்களை நடத்த வேண்டாமென அமெரிக்க அதிபர் டிரம்ப் தமது நாட்டின் படைகளுக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், ஈரானில் உள்ள எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் சேர்ந்து கூட்டுத்தாக்குதல் நடத்தியதாக ஈரான் தெரிவித்துள்ளது. முதற்கட்டத் தகவலின்படி இந்தத் தாக்குதலில் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை.

ஈரானின் இஸ்பஹானில் உள்ள இயற்கை எரிவாயு எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது வான்வழித் தாக்குதல்கள் நடத்தியதாக, ஈரானின் புரட்சிகரக் காவல்படைக்கு நெருக்கமான செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

summary

The report by the Fars news agency appeared timed to call into question comments by US President Donald Trump, who extended his deadline for Tehran to halt its attacks that have effectively closed the Strait of Hormuz, the narrow mouth of the Persian Gulf. Trump had threatened to strike Iranian power plants.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.