போரில் வெற்றி.. அணு ஆயுதம் வைத்துக்கொள்ள மாட்டோம் என ஈரான் உறுதி! - டிரம்ப்
ஈரான் ஒருபோதும் அணு ஆயுதங்களை பயன்படுத்தாது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதியளித்துள்ளதைப் பற்றி...
ஈரான் ஒருபோதும் அணு ஆயுதங்களை பயன்படுத்தாது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதியளித்துள்ளார்.
அணுசக்தி கொள்கைகள் தொடர்பான பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாத நிலையில், கடந்த பிப். 28 ஆம் தேதி ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப்படைகள் கடும் தாக்குதல் நடத்தின. இந்தத் தாக்குதல்களால் ஆடிப்போன ஈரானின் உச்ச தலைவரான கமேனி கொல்லப்பட்டார். அதன் தொடர்ச்சியாக, பல 40-க்கும் மேற்பட்ட ராணுவத் தலைவர்கள் கொல்லப்பட்டனர்.
ஈரானுக்கும் அமெரிக்கா - இஸ்ரேலுக்கும் நீடிக்கும் தொடர் சண்டைக்கு நேற்று (மார்ச் 23) தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ஈரான் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ள ஹார்முஸ் நீரிணையை 48 மணி நேரத்தில் திறக்காவிட்டால் அந்நாட்டின் மின் நிலையங்களை தாக்கி அழிப்போம் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார்.
அடுத்த ஐந்து நாள்கள் ஈரான் மீது தாக்குதல்களை நடத்த வேண்டாமென அமெரிக்க அதிபர் டிரம்ப் தமது நாட்டின் படைகளுக்கு உத்தரவிட்டுள்ளதைத் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், நேற்று வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், “நான் இதை முன்கூட்டியே சொல்ல விரும்பவில்லை, ஆனால், அவர்கள் (ஈரான்) ஒருபோதும் அணு ஆயுதத்தை வைத்திருக்க மாட்டார்கள் என்று ஒப்புக்கொண்டுள்ளனர்.
அவர்கள் அமெரிக்காவுக்கு விலைமதிப்புமிக்க பரிசு ஒன்றையும் வழங்கியுள்ளனர். ஈரானுடனான போரில் நாங்கள் வெற்றி பெற்றுவிட்டோம்” என்றார்.