முகப்பு
உலகம்

இரவு 1 மணிக்கு அழைத்தாலும்.. இந்திய தொழிலாளர்களை புகழும் புர்ஜ் கலீஃபாவை கட்டியவர்

இரவு 1 மணிக்கு அழைத்தாலும் பதில் சொல்வார்கள் என்று இந்திய தொழிலாளர்களை புகழ்ந்துள்ளார் புர்ஜ் கலீஃபாவை கட்டியவர்

புர்ஜ் கலீபா - file photo
பகிர்:

இரவு 1 மணிக்கு செல்போனில் அழைத்தாலும் அவர்கள் பதிலளிப்பார்கள் என்று புர்ஜ் கலிஃபவை கட்டிய கட்டுமான நிறுவனர் முகமது அலாபர் இந்திய தொழிலாளர்களை அதிகம் வேலைக்கு அமர்த்துவது குறித்து விளக்கம் கொடுத்துள்ளார்.

நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முகமது அலாபர், நல்ல திறமையான இந்திய தொழிலாளர்களையே நான் பெரும்பாலும் பணியமர்த்துவேன், அதற்கு ஒரே இடத்தில் நிலையாக பணியாற்றுவது, கடமை உணர்வு, கூடுதல் முயற்சி எடுக்கும் போக்கு போன்றவைதான்.

பல நேரங்களில் இந்திய தொழிலாளர்கள் நள்ளிரவு 1 மணிக்கு செல்போனில் அழைத்தாலும் அவர்கள் போனை எடுத்துப் பேசுவதை நான் கவனித்திருக்கிறேன். அது அவர்களுடைய பணியின் மீது அவர்கள் வைத்திருக்கும் பொறுப்பையே காட்டுகிறது என்று பாராட்டியிருக்கிறார்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.