மெட்டாவில் ஆள்குறைப்பு நடவடிக்கை: ஊழியர்களுக்கு அதிகாலையில் அனுப்பப்பட்ட மின்னஞ்சல் - பின்னணியில் என்ன?
மெட்டா நிறுவன ஊழியர்களுக்கு அதிகாலையில் அதிர்ச்சி! பணிநீக்க விவரம் குறித்து அனுப்பப்பட்ட மின்னஞ்சல்...
மெட்டா நிறுவனம் ஆள்குறைப்பு நடவடிக்கையை சிகப்பூரில் அதிகாலையிலேயே தொடங்கிவிட்டது. இதனால், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டதன்படி, அந்நிறுவனத்தில் 8,000 பணியாளர்கள் வேலை இழக்கும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
மேலும், அந்நிறுவனத்தில் பணியாளர் மறுசீரமைப்புக்குப்பின் 7,000 பேர் ஏ.ஐ. தொழிநுட்பம்சார்பு பிரிவுகளில் பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து, சிங்கப்பூரில் உள்ள மெட்டா பணியாளர்களுக்கு அதிகாலை 4 மணிக்கு மின்னஞ்சல் அனுப்பட்டுவிட்டதாம்.
கடந்த மார்ச் மாத இறுதி நிலவரப்படி, ஆள்குறைப்பு மற்றும் பல்வேறு பிரிவுகளில் பணியாளர் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்குப்பின், மெட்டாவில் பணியாற்றும் ஊழியர்கள் எண்ணிக்கை 80,000-க்கும் கீழ் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உதவியுடன் செலவினங்களைக் குறைத்தல் மற்றும் செயல் திறனை அதிகப்படுத்துதல் ஆகியவற்றுக்காக மேற்கண்ட முடிவை அந்நிறுவனம் எடுத்துள்ளது.
இதன்மூலம், ஆண்டுதோறும் 3 பில்லியன்(300 கோடி) டாலர் சேமிப்பாகும் என்று மார்க் ஜுக்கர்பெர்க்கின் மெட்டா கணித்துள்ளது. மேலும், ஏ.ஐ. தொழில்நுட்பம்சார் முதலீடுகளில் 145 பில்லியன் (14,500 கோடி) டாலர் வரை நிதி ஒதுக்கவும் மெட்டா ஆயத்தமாகி வருகிறதாம்.