மெட்டாவில் பணிநீக்க நடவடிக்கை தொடக்கம்! காலை 4 மணிக்கு வந்த மின்னஞ்சல்
மெட்டாவில் பணிநீக்க நடவடிக்கை தொடங்கியது, காலை 4 மணிக்கு வந்த மின்னஞ்சல்கள்.
மெட்டா நிறுவனத்தில் சர்வதேச அளவில் பணி நீக்க நடவடிக்கைகள் தொடங்கியிருக்கிறது. சிங்கப்பூரில் பணியாற்றி வந்த ஊழியர்களுக்கு அவர்களது பணிநீக்க மின்னஞ்சல் அதிகாலை 4 மணிக்கு வந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதன்கிழமை காலை முதல், நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான மெட்டா நிறுவன ஊழியர்களுக்கு, அவர்களது பணி நீக்க மின்னஞ்சல் கிடைக்கப்பெற்றுள்ளது.
சிங்கப்பூரில் வாழும் ஊழியர்களுக்குத்தான் முதல் மின்னஞ்சல் கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து ஐரோப்பா, அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த ஊழியர்களுக்கு அவர்களது பகல் நேரப்படி மின்னஞ்சல் கிடைக்கப்பெற்றிருக்கும்.
Advertisement
Advertisement
இந்த பணிநீக்க நடவடிக்கையின் பின்னணி குறித்து, மெட்டா நிறுவனம் அந்த மின்னஞ்சலில் விளக்கமும் கொடுத்திருக்கிறது.
இந்த பணி நீக்க நடவடிக்கைகள் முடியும்வரை, ஊழியர்கள் அனைவரையும் வீட்டிலிருந்தே பணியாற்றும்படி, மெட்டா நிறுவனம் அறிவுறுத்தியிருந்தது. மேலும் 7000 ஊழியர்களை ஏஐ-கவனமீர்க்கும் குழுக்களில் பணியாற்றும்படி மாற்றியிருக்கிறது.
மெட்டா நிறுவனத்தின் பொறியியல் மற்றும் பிராடக்ட் குழுக்களில்தான் அதிகம் நடந்திருக்கும் என்று கருதப்படுகிறது.