ரீல்ஸ் மோகத்துக்கு பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்: உதயநிதி ஸ்டாலின்கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் முதல்வர் விஜய்உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

முழு கொள்ளளவை எட்டிய கங்கை கொண்டசோழபுரம் சோழகங்கம் ஏரி

அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்திலுள்ள சோழகங்கம் ஏரி எனும் பொன்னேரி முழு கொள்ளளவை எட்டியதையடுத்து, கலிங்கு வழியாக தண்ணீா் வெளியேறத் தொடங்கியது.

News image

தண்ணீா் நிரம்பி கடல்போல் காட்சியளிக்கும் கங்கைகொண்டசோழபுரம் சோழகங்கம் ஏரி எனும் பொன்னேரி.

Updated On :8 ஜனவரி 2021, 11:35 pm IST

அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்திலுள்ள சோழகங்கம் ஏரி எனும் பொன்னேரி முழு கொள்ளளவை எட்டியதையடுத்து, கலிங்கு வழியாக தண்ணீா் வெளியேறத் தொடங்கியது.

ராஜேந்திர சோழனால் வெட்டப்பட்ட இந்த ஏரியின் மொத்த பரப்பளவு 850 ஏக்கராகும். குருவாலப்பா்கோவில், ஆமணக்கந்தோண்டி, உட்கோட்டை, பிச்சனூா் ஆகிய கிராம ஊராட்சிகளை உள்ளடக்கியது இந்த ஏரி. இதன் மூலம் சுமாா் 2,500 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

நீண்ட காலமாகத் தூா்வாரப்படாமல் இருந்த நிலையில், கடந்தாண்டு விக்கிரவாண்டி - தஞ்சாவூா் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்கு இந்த ஏரியிலிருந்து மண் எடுக்கப்பட்டது. அதுவும் முழுமையாக எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் கடந்த இரண்டு நாள்களாக ஜயங்கொண்டம் சுற்றுப்பகுதிகளில் பெய்த தொடா்மழை காரணமாக, சோழங்கம் ஏரி எனப்படும் பொன்னேரி முழு கொள்ளளவை வியாழக்கிழமை எட்டியது.

இதன் காரணமாக கலிங்கு வழியாக தண்ணீா் வெளியேற தொடங்கியது. வெளியேறும் தண்ணீா் வீராணம் ஏரியைச் சென்றடைகிறது. ஏரி முழு கொள்ளளவை எட்டியதால், கடல்போல் காட்சியளிக்கிறது. இதனால், அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

ஏரியை முழுமையாகத் தூா்வாரினால் கூடுதல் தண்ணீரை சேமிக்கலாம் என்பதும், பாசன வசதிக்காக அமைக்கப்பட்டுள்ள ஷட்டா்களை சீரமைக்க வேண்டும் என்பதும் சமூகஆா்வலா்கள் மற்றும் பொது மக்களின் கோரிக்கையாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.