ஞாயிற்றுக்கிழமை வரும் பிரதோஷத்தில் நந்தியையும் நாயகனாம் சிவபெருமானையும் வழிபட்டு வந்தால் மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெற வழி பிறக்கும். சுபகாரியங்கள் நடைபெறும்.
திங்கள்கிழமை வரும் பிரதோஷத்தில் வழிபட்டால் மனச்சஞ்சலங்கள் நீங்கி, மன அமைதி கிடைக்கும். நல்லெண்ணங்கள் உருவாகும்.
செவ்வாய்க்கிழமை வரும் பிரதோஷத்தில் வழிபட்டால் உணவுப்பற்றாக்குறை அகலும். உத்தியோக வாய்ப்பும் உதிரி வருமானங்களும் பெருகும்.
புதன் கிழமை வரும் பிரதோஷத்தில் வழிபட்டால் புத்திர விருத்தியும் ஆண் சந்தான பாக்கியமும் கிட்டும்.
வியாழக்கிழமை வரும் பிரதோஷத்தில் வழிபட்டால் படிப்புத் தடை அகலும். கல்வி ஞானம் பெருகும். மதிநுட்பத்தினால் மகத்துவம் காண்பீர்கள்.
வெள்ளிக்கிழமை வரும் பிரதோஷ வழிபாட்டினால் பகை விலகும். பாசம் கூடும். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
சனிக்கிழமை வரும் பிரதோஷ வழிபாட்டினால் சகல பாக்கியங்களும் கிடைக்கும்.
எல்லா பிரதோஷங்களிலும் வழிபாடு செய்வது இனிமையான வாழ்க்கையை ஏற்படுத்தி தரும். நல்ல வாழ்க்கை அமைய நந்தியை நாடுவது நல்லது.
பிரதோஷத்தன்று நந்தியை வழிபட்டால் நலன்களும் வளங்களும் கிடைக்கும். பதினோறு பிரதோஷங்கள் தொடர்ந்து பூஜிப்பவர்களுக்கு சகல யோகங்களும் வந்து சேரும்.
எட்டு பிரதோஷங்கள் தொடர்ந்து விரதமிருந்து நந்திபெருமானை வழிபடுவதன் மூலம் மறுபிறவி இல்லை என்பர்.
எனவே, பெருமை மிகுந்த பிரதோஷ நாளை மனதில் பதித்துக்கொண்டு வழிபடுவதால் வியக்கும் விதத்தில் வாழ்க்கை அமையும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆயுஷ் மாத்ரேவுக்கு மாற்று வீரர் அறிவிப்பு!
ஜனநாயகக் கடமையில் அரசியல் தலைவர்கள்!

தேர்தலைப் புறக்கணித்த வேங்கைவயல் மக்கள்!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! பிற்பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு! - நேரலை!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


