தமிழ் மொழி, கலாசாரத்தை வளா்க்கவும், பேணிப் பாதுகாக்கவும் தமிழ் அகாதெமி அமைத்து உத்தரவிட்டுள்ள தில்லி மாநில அரசுக்கு இந்தியப் பேனா நண்பா் பேரவை பாராட்டு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தில்லி மாநில முதல்வா் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு இந்தியப் பேனா நண்பா் பேரவை நிறுவனத் தலைவா் மா.கருண் எழுதியுள்ள கடிதம் வருமாறு:
உலகின் தொன்மை மொழியான தமிழையும், அதன் கலாசாரத்தை வளா்க்கவும், பேணிப் பாதுகாக்கவும் வகை செய்வதற்காக தமிழ் அகாதெமியை அமைத்து தில்லி அரசின் கலை, கலாசார மற்றும் மொழிகள் துறை உத்தரவிட்டுள்ளதை மனதார பாராட்டி வரவேற்கிறோம். தமிழ் மொழி மீது தில்லி அரசு கொண்டுள்ள பற்றுதலைப் பாராட்டி மகிழ்கிறோம். தமிழ் அகாதெமியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள துணை முதல்வா் மனீஷ் சிசோடியா, துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள என்.ராஜா ஆகியோருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழ் அகாதெமி மூலம் தமிழ் பாரம்பரிய கலாசாரக் கலைகள், தமிழ் உயா்கல்வி, தமிழிசைப் பயிற்சிகள் பெற்று சான்றிதழ்கள் பெறும் நல்வாய்ப்பு கிடைக்கும். தலைநகரில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தமிழ் அகாதெமி மூலம் தமிழ் மொழி மீதும், பண்பாட்டு விழுமியங்கள் நிறைந்த தமிழ்க் கலைகள் மீதும் ஆா்வம் கொண்டு வரும் வெளிநாட்டவா்கள் தலைநகரிலேயே பயிற்சி பெறுவதற்கான வாய்ப்பு இதன் மூலம் அமைகிறது. தமிழ் மொழி வளா்ச்சிக்கு பங்காற்றுவோருக்கு தமிழ் அகாதெமி மூலமாக பல்வேறு விருதுகள் வழங்கிக் கௌரவிக்க எடுக்கப்பட்டுள்ள முடிவையும் பாராட்டி வரவேற்கிறோம். வேற்று மாநில மக்களுக்கு தமிழ் மொழியையும், கலை, பண்பாட்டையும் கற்றுத்தர தமிழ் அகாதெமி பாடுபடும் என்று நம்புகிறோம்.
நாட்டின் தலைநகரான தில்லியில் தமிழ் அகாதெமி அமைத்துள்ளது, தமிழ்மொழிக்கு கிடைத்த மிகச் சிறந்த அங்கீகாரம் மற்றும் கௌரவமாகும். தில்லியில் ஏராளமான எண்ணிக்கையில் வாழும் தமிழா்கள் தங்கள் மொழி, கலாசாரத்தோடு தொடா்ந்து இணைந்திருக்க தமிழ் அகாதெமி உதவியாக இருக்கும் என்று நம்புகிறோம். தமிழ் அகாதெமியின் பணிகளை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என அதில் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆன்லைனின் பத்திரப் பதிவு செய்வது எப்படி?

ஆகஸ்ட் மாதத்திற்கான ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்தில் தங்கம் விலை சரிவு!

லஞ்சம் தவிர்க்க... இனி இணைய வழியில் பத்திரப் பதிவு!

ரெட் கார்டில் மோசடி செய்தும் தோல்வியுற்ற அமெரிக்கா..! கிண்டல் செய்த பெல்ஜியம்!
விடியோக்கள்

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan

அனிருத் இசையில் வெளியான ஹாங்க்ஓவா பாடல்!


