கடந்த நிதி ஆண்டில் இந்திய பங்குச் சந்தையில் வெளிநாட்டு நிறுவனங்கள் ரூ. 1,39,408 கோடி மதிப்பிலான முதலீடு செய்துள்ளன.
இந்திய பங்குச் சந்தையில் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் முதலீடு செய்வது 1992-1993 ஆண்டு முதல் அனுமதிக்கப்பட்டது. அந்த ஆண்டு ரூ. 13 கோடி அளவுக்கு முதலீடுகள் செய்யப்பட்டன. அதன் பிறகு, ஒரே ஆண்டில் மிக அதிகமான அளவில் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளது கடந்த நிதி ஆண்டில்தான்.
பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியம் (செபி) திங்கள்கிழமை வெளியிட்டுள்ள தகவலின்படி, 2012-2013 நிதி ஆண்டில் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ. 1,39,408 கோடியை முதலீடு செய்துள்ளன. இந்தியாவில் பொருளாதார சீர்த்திருத்த நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதையே முதலீடுகள் அதிகரித்திருப்பது சுட்டிக் காட்டுகிறது.
2013-ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மட்டும் ரூ. 55 ஆயிரம் கோடிக்கு மேல் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்துள்ளன. 1992-ஆம் ஆண்டு முதல் ஒட்டுமொத்தமாக ரூ. 6.3 லட்சம் கோடியை பங்குச் சந்தையிலும், ரூ. 1.68 லட்சம் கோடியை கடன் பத்திரங்களிலும் இந்நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன. 2013-ஆம் ஆண்டு மார்ச் இறுதி வரை 1,765 பதிவு பெற்ற நிறுவனங்கள் இந்தியாவில் செயல்பட்டு வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பறவை கண்காணிப்பில் பொதுமக்களின் பங்கேற்பை ஊக்குவிக்க தேசிய உயிரியல் பூங்காவின் முன்முயற்சி!
கனிம வளங்கள் கொண்டு செல்ல தடை கோரி புளியறையில் சாலை மறியல்: 35 போ் கைது

தவெகவுடன் கூட்டணியா? கட்சி தலைமை முடிவு செய்யும் துரை வைகோ
ஜஹாங்கீா்புரியில் இரு சக்கர வாகனங்களுக்கு தீ வைத்த 3 போ் கைது
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


