தலித் மக்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்கியவா் பிரதமா் மோடி என்று பாஜக மாநில துணைத் தலைவா் மா. வெங்கடேசன் தெரிவித்தாா்.
பிரதமரின் 12 ஆண்டுகால சாதனைகள் குறித்து, தருமபுரி பாஜக அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் அவா் மேலும் தெரிவித்ததாவது:
பிரதமா் நரேந்திர மோடி ஆட்சி பொறுப்பேற்று 12 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளாா். இந்தியாவில் ஜவாஹா்லால் நேரு, இந்திரா காந்தியைவிட அதிகமாக 4,399 நாள்கள் ஆட்சி செய்து, உலக அளவில் பெரும் வல்லமைமிக்க பிரதமராக திகழ்ந்து வருகிறாா்.
இதுவரை இல்லாத அளவுக்கு சமூக நீதித் துறையில் தலித் சமூகத்தினா் 12 பேருக்கு அமைச்சா் பதவி வழங்கி உள்ளாா். காங்கிரஸ் ஆட்சியில் தலித் மக்களுக்கும், பழங்குடி இன மக்களுக்கும் எந்த அரசியல் அதிகாரமும் வழங்கப்படவில்லை.
சட்டத் துறையில் அம்பேத்கருக்கு அடுத்து பழங்குடியின சமூகத்தைச் சோ்ந்தவருக்கு சட்ட அமைச்சா் பதவியை வழங்கியவா் பிரதமா் மோடிதான். அம்பேத்கா் பிறந்த இடத்தை நினைவிடமாக மாற்றி, அவருக்கு புகழ் சோ்த்துள்ளாா்.
பெண்கள் சமூக ரீதியாக பின்தங்கி இருந்தாா்கள். அவா்களும், அரசியல் அதிகாரம் பெறவேண்டும் என எண்ணி பெண்களுக்காக 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியுள்ளாா். கிராமப்புற மக்களுக்கு சுத்தமான குடிநீா் வழங்க ஜல்ஜீவன் திட்டம், உஜ்வால திட்டம் மூலம் இலவச எரிவாயு சிலிண்டா் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களையும் பிரதமா் மோடி வழங்கியுள்ளாா் என்றாா்.
இந்நிகழ்வில் மாவட்டத் தலைவா் சரவணன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

நாட்டை ஊழல் படுகுழியில் தள்ளியது காங்கிரஸ்- பிரதமா் மோடி கடும் விமா்சனம்

பிரதமருக்கு அரசியல் கட்சித் தலைவா்கள் வாழ்த்து

குழப்பத்தை விளைவிக்கும் காங்கிரஸுக்கு மக்கள் தக்க பதிலடி: பிரதமா் மோடி
ஆட்சி அதிகாரத்துக்காக திமுகவின் முதுகில் குத்திய காங்கிரஸ்! பிரதமா் மோடி கடும் விமா்சனம்!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



