மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

தங்கம் இறக்குமதி கட்டுப்பாடுகள் பலன் அளித்துவருகின்றன: மத்திய அரசு

தங்கம் இறக்குமதி செய்வதை கட்டுப்படுத்த மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் நல்ல பலனை தந்துவருகின்றன என்று மத்திய நிதி அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

News image
Updated On :11 ஜூன் 2013, 7:40 pm

தங்கம் இறக்குமதி செய்வதை கட்டுப்படுத்த மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் நல்ல பலனை தந்துவருகின்றன என்று மத்திய நிதி அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

புது தில்லியில் மத்திய நிதி அமைச்சகத்தின் பொருளாதார பிரிவுச்

செயலர் அரவிந்த் மாயாராம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது:

கடந்த ஒரு வார காலத்தில் தங்கம் இறக்குமதி செய்வதற்காக அன்னிய செலாவணி பயன்படுத்தப்படுவது வெகுவாக குறைந்திருக்கிறது. கட்டுப்பாடுகள் வருவதற்கு முன்பு, ஒரு நாளில் சராசரியாக, அதிகபட்சம் ரூ. 1,135 கோடி மதிப்பிலான அன்னிய செலாவணி தங்க இறக்குமதிக்காக தேவைப்பட்டது.

அது இப்போது ரூ. 225 கோடியாக குறைந்துள்ளது. ஒரு குறிப்பிட்ட நாளில் ரூ. 38 கோடிக்கு மட்டுமே தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது. தங்கம் வாங்குவதற்கு அன்னிய செலாவணி பயன்படுவது வெகுவாக குறைந்துள்ளது பொருளாதார அளவில் நல்ல செய்தியாகும்.

நடப்புக் கணக்கு பற்றாக்குறை அதிக அளவில் இருப்பது மத்திய அரசை கவலைக்கு உள்ளாக்கியிருக்கிறது. இதனை குறைக்கும் விதமாக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அவற்றில் ஒரு பகுதியாக தங்கம் இறக்குமதிகளுக்கான சில கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டன. இறக்குமதிக்கான சுங்க வரி 8 சதவீதமாக உயர்த்தப்பட்டது. வங்கிகள் தங்கம் இறக்குமதி செய்வதற்கு ரிசர்வ் வங்கி ஏற்கெனவே கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.

2012-2013 நிதி ஆண்டில் சராசரியாக ஒரு மாதத்தில் 70 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது. ஆனால் நடப்பு 2013-2014 நிதி ஆண்டில் மாத சராசரியாக 152 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது. இந்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் ரூ. 75 ஆயிரம் கோடி அன்னிய செலாவணி இதற்காக பயன்படுத்தப்பட்டது என்று அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.