மும்பை பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் 298 புள்ளிகள் வீழ்ச்சி ஏற்பட்டது. வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீட்டெண் 19,143 என்ற அளவில் நிலைத்தது.
ரூபாயின் மதிப்பில் கடும் சரிவு ஏற்பட்டது பங்குச் சந்தையை பாதித்தது. மேலும் நிலக்கரிச் சுரங்க உரிமம் வழங்கும் முறைகேட்டில் ஜிண்டால் ஸ்டீல் நிறுவனத்தின் தலைவர் நவீன் ஜிண்டாலை தொடர்புபடுத்தும் விதமாக சிபிஐ முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்தது அந்நிறுவனத்தின் பங்கு விலையை 24 சதவீத அளவுக்கு சரிய வைத்தது.
சென்செக்ஸில் பட்டியலில் உள்ள 13 துறை பங்குகளும் இழப்பை சந்தித்தன. மே மாத கார் விற்பனை புள்ளிவிவரம் உற்சாகம் அளிக்காததால் ஆட்டோமொபைல் துறை பங்குகள் நஷ்டத்தில் விற்பனையாகின. கடந்த இரண்டு மாத அளவில் மும்பை பங்குச் சந்தையில் இதுவே மிகவும் தாழ்ந்த நிலையாகும்.
கரன்சி சந்தையில் ரூபாயின் மதிப்பு மிகவும் சரிந்துள்ள நிலையில், ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைக்கும் என்ற எதிர்பார்ப்புக்கே இடமில்லாமல் போய்விட்டது என்று பங்கு வர்த்தகர்கள் கருத்து தெரிவித்தனர்.
தேசிய பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் 29 புள்ளிகள் சரிந்து, வர்த்தக முடிவில் நிஃப்டி குறியீடு 5,848 என்ற அளவில் நிலைத்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 37 மாதிரி சூரிய கிராமங்கள்: திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தீவிரம்

சென்னையில் 18,971 போலீஸாா் தபால் வாக்கு

பிலிப்பின்ஸ்: ராணுவத்துடன் மோதலில் 10 பிரிவினைவாதிகள் சுட்டுக் கொலை
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


