பொங்கல் திருநாளுக்கு வழங்கப்படும் வேட்டியின் அளவு 4 முழமாகக் குறைப்பு: அமைச்சர்டாஸ்மாக் ஊழியர்களுக்கு நாளைமுதல் ஊதிய உயர்வு!தவெக அரசுடன் சென்னை மேயர் சேர்ந்து செயல்படுவதில்லை: ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டுகொலைக்களமாக மாறுகிறதா தமிழ்நாடு? டிடிவி தினகரன் கேள்வி! தேர்தல் வழக்குகள்: முதல்வர் விஜய் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை தள்ளிவைப்புகொளத்தூரில் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து மு.க. ஸ்டாலின் வழக்கு: தீர்ப்புக்காக ஒத்திவைப்பு 2026 பிரதமர் வேட்பாளர் யார்? தமிழக அரசியலில் உருவான சூறாவளி!தமிழ்நாடு மின் தொடரமைப்பு கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம்: முதல்வர் அறிவிப்புபால் கொள்முதல் விலை மேலும் ரூ.3 உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்புநேபாள வெள்ளம்: பலி எண்ணிக்கை 903ஆக உயர்வு! முதல்வர் விஜய்க்கு பிரதமராகும் எண்ணம் துளியும் கிடையாது: வைகோ சாலை விரிவாக்கம்! விரைவில் விரிவான திட்ட அறிக்கை வெளியிடப்படும் - ஆதவ் அர்ஜுனா தகவல் கொடியேற்றத்துடன் தொடங்கியது திருச்செந்தூர் முருகன் கோயில் ஆவணித் திருவிழா! ஹோர்முஸ் நீரிணையில் ஈரானிய ராக்கெட் ஏவுதளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்ஆன்லைன் செயலி மூலம் மோசடி: செப்டிக் டேங்கில் பதுக்கப்பட்ட பணம்? போலீஸார் உடைத்து சோதனை

மும்பை, தேசியப் பங்கு சந்தைகள் சரிவு

சர்வதேச அளவில் அமெரிக்கா-ஈரான் இடையே நிலவும் பதற்றம் காரணமாக, இந்தியப் பங்குச் சந்தைகளில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகம் சரிவுடன் நிறைவடைந்தது.

Published On :22 ஜூலை 2025, 3:09 pm IST


சர்வதேச அளவில் அமெரிக்கா-ஈரான் இடையே நிலவும் பதற்றம் காரணமாக, இந்தியப் பங்குச் சந்தைகளில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகம் சரிவுடன் நிறைவடைந்தது.
திங்கள்கிழமை காலை ஏற்றத்துடன் தொடங்கிய மும்பை பங்குச் சந்தை, மாலையில் 71.53 புள்ளிகள் சரிவடைந்து, 39,122.96 புள்ளிகளாக நிறைவடைந்தது. இதேபோல், தேசியப் பங்குச் சந்தை நிஃப்டி 24.45 புள்ளிகள் சரிவடைந்து 11,699.65 புள்ளிகளாக நிலைப்பெற்றது. இருப்பினும், நண்பகல் நேரத்தில் தேசியப் பங்குச் சந்தை  குறியீட்டு எண் 11,670.22-இல் இருந்து 11,754  வரை அதிகரித்துக் காணப்பட்டது.
அமெரிக்கா-சீனா இடையேயான வர்த்தகப் பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாததால் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வதற்கு முதலீட்டாளர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.
இதனால், எண்ணெய் உற்பத்தி, உலோகம், ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனங்களின் பங்குகளின் விலை குறைந்துள்ளன. குறிப்பாக, ஓஎன்ஜிசி, டாடா ஸ்டீல், வேதாந்தா குழுமம், பஜாஜ் ஆட்டோ, டெக் மஹிந்திரா, ஹீரோ மோட்டோகார்ப், கோட்டக் வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, இன்ஃபோசிஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகளின் விலை சரிவைச் சந்தித்தன.
இருப்பினும், யெஸ் பேங்க், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, டாடா கல்சடன்சி, பாரத ஸ்டேட் வங்கி, இண்டஸ்இண்ட் வங்கி, மாருதி, ஐடிசி ஆகிய நிறுவனங்களின் பங்கு விற்பனை 2.19 சதவீதம் அதிகரித்துக் காணப்பட்டது.
சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு திங்கள்கிழமை 23 காசுகள் அதிகரித்து, ரூ.69.35 காசுகளாக உயர்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.