பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

மும்பை, தேசியப் பங்கு சந்தைகள் சரிவு

சர்வதேச அளவில் அமெரிக்கா-ஈரான் இடையே நிலவும் பதற்றம் காரணமாக, இந்தியப் பங்குச் சந்தைகளில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகம் சரிவுடன் நிறைவடைந்தது.

News image
Updated On :25 ஜூன் 2019, 12:57 am IST


சர்வதேச அளவில் அமெரிக்கா-ஈரான் இடையே நிலவும் பதற்றம் காரணமாக, இந்தியப் பங்குச் சந்தைகளில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகம் சரிவுடன் நிறைவடைந்தது.
திங்கள்கிழமை காலை ஏற்றத்துடன் தொடங்கிய மும்பை பங்குச் சந்தை, மாலையில் 71.53 புள்ளிகள் சரிவடைந்து, 39,122.96 புள்ளிகளாக நிறைவடைந்தது. இதேபோல், தேசியப் பங்குச் சந்தை நிஃப்டி 24.45 புள்ளிகள் சரிவடைந்து 11,699.65 புள்ளிகளாக நிலைப்பெற்றது. இருப்பினும், நண்பகல் நேரத்தில் தேசியப் பங்குச் சந்தை  குறியீட்டு எண் 11,670.22-இல் இருந்து 11,754  வரை அதிகரித்துக் காணப்பட்டது.
அமெரிக்கா-சீனா இடையேயான வர்த்தகப் பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாததால் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வதற்கு முதலீட்டாளர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.
இதனால், எண்ணெய் உற்பத்தி, உலோகம், ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனங்களின் பங்குகளின் விலை குறைந்துள்ளன. குறிப்பாக, ஓஎன்ஜிசி, டாடா ஸ்டீல், வேதாந்தா குழுமம், பஜாஜ் ஆட்டோ, டெக் மஹிந்திரா, ஹீரோ மோட்டோகார்ப், கோட்டக் வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, இன்ஃபோசிஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகளின் விலை சரிவைச் சந்தித்தன.
இருப்பினும், யெஸ் பேங்க், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, டாடா கல்சடன்சி, பாரத ஸ்டேட் வங்கி, இண்டஸ்இண்ட் வங்கி, மாருதி, ஐடிசி ஆகிய நிறுவனங்களின் பங்கு விற்பனை 2.19 சதவீதம் அதிகரித்துக் காணப்பட்டது.
சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு திங்கள்கிழமை 23 காசுகள் அதிகரித்து, ரூ.69.35 காசுகளாக உயர்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.