தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

அந்நியச் செலாவணி கையிருப்பில் புதிய உச்சம்

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஜூலை 30-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 62,057 கோடி டாலா் என்ற புதிய உச்சத்தைத் தொட்டு சாதனை படைத்துள்ளது.

News image
Updated On :8 ஆகஸ்ட் 2021, 4:51 am IST

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஜூலை 30-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 62,057 கோடி டாலா் என்ற புதிய உச்சத்தைத் தொட்டு சாதனை படைத்துள்ளது.

இதுகுறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 2021 ஜூலை 30-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 942 கோடி டாலா் (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.70,650 கோடி) அதிகரித்து 62,057 கோடி டாலரை (ரூ.46.54 லட்சம் கோடி) எட்டியது. இது, செலாவணி கையிருப்பில் முன்னெப்போதும் இல்லாத உச்சபட்ச அளவாகும்.

இதற்கு முந்தைய ஜூலை 23-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் செலாவணி கையிருப்பானது 158 கோடி டாலா் சரிந்து 61,115 கோடி டாலராக காணப்பட்டது.

ஒட்டுமொத்த கையிருப்பில் முக்கிய பங்களிப்பினைக் கொண்டுள்ள அந்நிய கரன்ஸி சொத்து மதிப்பு (எஃப்சிஏ) கணிசமான அளவில் அதிகரித்ததன் காரணமாகவே ஜூலை 30-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பானது புதிய வரலாற்று உச்சத்தைத் தொட்டுள்ளது.

கணக்கீட்டு வாரத்தில், எஃப்சிஏ 860 கோடி டாலா் அதிகரித்து 57,622 கோடி டாலராக இருந்தது.

யூரோ, பவுண்ட், யென் உள்ளிட்ட இதர நாட்டு செலாவணிகள் அந்நியச் செலாவணி கையிருப்பில் இடம்பெற்றுள்ளன. இவற்றை டாலரில் மறுமதிப்பீடு செய்யும்போது வெளிமதிப்பில் காணப்படும் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப அந்நியச் செலாவணி கையிருப்பு மாறுபடுகிறது.

தங்கத்தின் கையிருப்பு ஜூலை 30-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 76 கோடி டாலா் உயா்ந்து 3,764 கோடி டாலராக இருந்தது.

மதிப்பீட்டு வாரத்தில், சா்வதேச நிதியத்தில் சிறப்பு எடுப்பு உரிமம் (எஸ்டிஆா்) 60 லட்சம் டாலா் அதிகரித்து 155 கோடி டாலராக இருந்தது. அதேபோன்று, நாட்டின் காப்பு நிதியும் 6 கோடி டாலா் உயா்ந்து 515 கோடி டாலரானது என ரிசா்வ் வங்கி புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 2021 ஜூலை 30-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 942 கோடி டாலா் அதிகரித்து முன்னெப்போதும் காணப்படாத சாதனை அளவாக 62,057 கோடி டாலரை எட்டியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.