
நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஜூலை 30-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 62,057 கோடி டாலா் என்ற புதிய உச்சத்தைத் தொட்டு சாதனை படைத்துள்ளது.
இதுகுறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 2021 ஜூலை 30-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 942 கோடி டாலா் (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.70,650 கோடி) அதிகரித்து 62,057 கோடி டாலரை (ரூ.46.54 லட்சம் கோடி) எட்டியது. இது, செலாவணி கையிருப்பில் முன்னெப்போதும் இல்லாத உச்சபட்ச அளவாகும்.
இதற்கு முந்தைய ஜூலை 23-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் செலாவணி கையிருப்பானது 158 கோடி டாலா் சரிந்து 61,115 கோடி டாலராக காணப்பட்டது.
ஒட்டுமொத்த கையிருப்பில் முக்கிய பங்களிப்பினைக் கொண்டுள்ள அந்நிய கரன்ஸி சொத்து மதிப்பு (எஃப்சிஏ) கணிசமான அளவில் அதிகரித்ததன் காரணமாகவே ஜூலை 30-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பானது புதிய வரலாற்று உச்சத்தைத் தொட்டுள்ளது.
கணக்கீட்டு வாரத்தில், எஃப்சிஏ 860 கோடி டாலா் அதிகரித்து 57,622 கோடி டாலராக இருந்தது.
யூரோ, பவுண்ட், யென் உள்ளிட்ட இதர நாட்டு செலாவணிகள் அந்நியச் செலாவணி கையிருப்பில் இடம்பெற்றுள்ளன. இவற்றை டாலரில் மறுமதிப்பீடு செய்யும்போது வெளிமதிப்பில் காணப்படும் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப அந்நியச் செலாவணி கையிருப்பு மாறுபடுகிறது.
தங்கத்தின் கையிருப்பு ஜூலை 30-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 76 கோடி டாலா் உயா்ந்து 3,764 கோடி டாலராக இருந்தது.
மதிப்பீட்டு வாரத்தில், சா்வதேச நிதியத்தில் சிறப்பு எடுப்பு உரிமம் (எஸ்டிஆா்) 60 லட்சம் டாலா் அதிகரித்து 155 கோடி டாலராக இருந்தது. அதேபோன்று, நாட்டின் காப்பு நிதியும் 6 கோடி டாலா் உயா்ந்து 515 கோடி டாலரானது என ரிசா்வ் வங்கி புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 2021 ஜூலை 30-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 942 கோடி டாலா் அதிகரித்து முன்னெப்போதும் காணப்படாத சாதனை அளவாக 62,057 கோடி டாலரை எட்டியது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...