ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

பங்குச்சந்தைப் பட்டியலில் இணைந்த ‘பேடிஎம்’ நிறுவனம்!

இணையப் பணப்பரிவர்த்தனை செயலிகளில் ஒன்றான ‘பேடிஎம்’ நிறுவனம் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கிறது.

News image

பங்குச்சந்தைப் பட்டியலில் இணைந்த ‘பேடிஎம்’ நிறுவனம்!

Updated On :19 நவம்பர் 2021, 7:37 am

இணைய பணப்பரிவர்த்தனை செயலிகளில் ஒன்றான ‘பேடிஎம்’ நிறுவனம் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கிறது.

இந்தியாவைத் தலைமையிடமாக வைத்துச் செயல்படும் இணையப் பணப் பரிவர்த்தனை நிறுவனமான ‘பேடிஎம்’ தன்னுடைய முதலீடுகளை அதிகரிக்க ஐபிஓ (தனிநபர் முதலீடு) முறையில் பங்குச்சந்தையில் நேற்று(நவ.18) இணைந்திருக்கிறார்கள்.

இந்தியாவில் கடந்த 2010 ஆம் ஆண்டு அறிமுகமான பேடிஎம் நிறுவனம் இதுவரை அனைத்து விதமான இணையப் பரிவர்த்தனையிலும் தவிர்க்க முடியாத செயலியாக உருவாகியிருக்கிற நிலையில் அந்நிறுவனத்தின் வளர்ச்சிக்காக மேலும் 18,000 கோடி திரட்டுவதற்காக பங்குச்சந்தையின் பட்டியலில் இணைந்திருக்கிறது.

ஒரு பங்கின் விலை ரூ.2080 - 2150 என ஆரம்பித்திருந்தாலும் தற்போது அந்நிறுவனம் தொடர் சரிவால் 30 சதவீதம் குறைந்து ஒரு பங்கு ரூ.1560க்கு விற்பனையாகிவருகிறது.

மேலும் பேடிஎம் நிறுவனத்தில் சீனாவின் பிரபல அலிபாபா நிறுவனம் முதலீடு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.