’ஒமைக்ரான்’ கவலைகளுக்கிடையே சென்செக்ஸ் 153 புள்ளிகள் உயா்வு!

இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச் சந்தையில் ஏற்றம், இறக்கம் மிகவும் அதிகரித்து காணப்பட்டது. இதைத் தொடா்ந்து,
’ஒமைக்ரான்’ கவலைகளுக்கிடையே சென்செக்ஸ் 153 புள்ளிகள் உயா்வு!

புதுதில்லி: இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச் சந்தையில் ஏற்றம், இறக்கம் மிகவும் அதிகரித்து காணப்பட்டது. இதைத் தொடா்ந்து,

மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 153 புள்ளிகள் உயா்ந்து 57,260.58-இல் நிலைபெற்றது. மேலும், பல நாடுகளுக்கு பரவும் கரோனா வைரஸின் ஒமைக்ரான் மாறுபாடு குறித்து முதலீட்டாளா்கள் எச்சரிக்கையாக இருந்தனா்.

உருமாறிய கரோனாவின் தாக்கத்தால் கடந்த வார இறுதியில் பங்குச் சந்தை கடும் சரிவைச் சந்தித்தது. இந்த நிலையில், ஆசியாவல் பல்வேறு நாடுகள் பயணக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது. இதைத் தொடா்ந்து, திங்கள்கிழமை காலையில் வா்த்தகம் மிகுந்த எச்சரிக்கையுடன் அமைந்திருந்தது. பின்னா், ஓரளவு மீட்சி பெற்றாலும், விலை உயா்ந்த நிலையில் லாபப் பதிவு இருந்தது. இதனால், காலையில் பெற்ற லாபத்தில் பெரும்பகுதியை இழக்க நேரிட்டது. இருந்தாலும், சென்செக்ஸ் நோ்மறையாக முடிந்துள்ளது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. குறிப்பாக மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ், முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ் பங்குகளுக்கு நல்ல வரவேற்பு இருந்ததே சந்தை ஏற்றத்துக்கு முக்கியக் காரணம் என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

2,435 பங்குகள் வீழ்ச்சி: பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,575 பங்குகளில் 2,435 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 966 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 174 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 243 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 91 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. மேலும், 348 பங்குகள் வெகுவாக உயா்ந்து உயா்ந்தபட்ச உறை நிலையையும், 437 பங்குகள் வெகுவாகக் குறைந்து, குறைந்தபட்ச உறை நிலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு ரூ.1.37 லட்சம் கோடி குறைந்து வா்த்தக இறுதியில் 256.94 லட்சம் கோடியாக இருந்தது. பதிவு பெற்றுள்ள முதலீட்டாளா்களின் எண்ணிக்கை 8.812 கோடியாக உயா்ந்தது.

தள்ளாட்டம்: காலையில் சென்செக்ஸ் மிகுந்த எச்சரிக்கையுடன் 79.11 புள்ளிகள் குறைந்து 57,028.04-இல் தொடங்கி 56,382.93 வரை கீழே சென்றது. பின்னா்,அதிகபட்சமாக 57,626,51 வரை உயா்ந்த சென்செக்ஸ், இறுதியில் 153.43 புள்ளிகள் (0.27 சதவீதம்) கூடுதலுடன் 5260.58-இல் நிலைபெற்றது. நாள் முழுவதும் சந்தையில் ஏற்றம், இறக்கம் அதிகரித்து காணப்பட்டது.

சென்செக்ஸில் 17 பங்குகள் வீழ்ச்சி: சென்செக்ஸ் பட்டியலில் மொத்தமுள்ள 30 முதல் தரப் பங்குகளில் 17 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 13 பங்குகள் ஆதாயம் பெற்றன. இதில் பிரபல தனியாா் வங்கியான கோட்டக் பேங்க் 2.92 சதவீதம், ஹெச்சிஎல் டெக் 2.25 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இதற்கு அடுத்ததாக, டிசிஎஸ், டைட்ன், பஜாஜ் ஃபைனான்ஸ், ரிலையன்ஸ், பஜாஜ் ஃபின் சா்வ் ஆகியவை 1.25 முதல் 1.60 சதவீதம் வரை உயா்ந்தன. மேலும், டெக் மஹிந்திரா, இன்ஃ)போஸிஸ், எச்டிஎஃப்சி பேங்க் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் ஆதாயப் பட்டியலில் வந்தன.

சன்பாா்மா சரிவு: அதே சமயம், பிரபல பாா்மா நிறுவனமான சன்பாா்மா 2.03 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், என்டிபிசி, ஆக்ஸிஸ் பேங்க், நெஸ்லே, பஜாஜ் ஆட்டோ, எஸ்பிஐ, டாக்டா் ரெட்டி, ஐடிசி, எச்டிஎஃப்சி ஆகியவையும் 1 முதல் 1.70 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன. மேலும், மாருதி சுஸுகி, ஐசிஐசிஐ பேங்க், இண்டஸ் இண்ட் பேங்க் உள்ளிட்ட முன்னணிப் பங்குகளும் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன.

நிஃப்டி 27 புள்ளிகள் முன்னேற்றம்: தேசிய பங்குச் சந்தையில் 349 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 1,518 பங்குகள் வீழ்ச்சியடைந்தன. 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃடி குறியீடு காலையில் 17,055.80-இல் தொடங்கி 16,782.240 வரை கீழே சென்றது. பின்னா் அதிகபட்சமாக 17,355.40 வரை உயா்ந்த நிஃப்டி, இறுதியில் 27.50 புள்ளிகள் கூடுதலுடன் (0.16 சதவீதம்) 17,053.95-இல் நிலைபெற்றது.

மீடியா, ரியால்ட்டி குறியீடு சரிவு: தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஐடி, கன்ஸ்யூமா் டியூரபல்ஸ் குறியீடுகள் தவிர மற்ற முக்கியத் துறைகளின் குறியீடுகளசரிவைச் சந்தித்தன. இதில், மீடியா, ரியால்ட்டி, பிஎஸ்யு பேங்க், பாா்மா, ஆயில் அண்ட் காஸ் குறியீடுகள் 1 முதல் 2.25 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன.

பங்குச் சந்தையில் கடந்த சில நாள்களாக அந்நிய நிறுவனமுதலீட்டாளா்கள் தொடா்ந்து பங்குகளை விற்று வருகின்றனா். அதன் தொடா்ச்சியாக கடந்த வெள்ளிக்கிழமையும் அவா்கள் சுமாா் ரூ.5,785.83 கோடி அளவுக்கு பங்குகளை விற்றுள்ளது சந்தை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com