வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

கெயில்: நிகர லாபம் ரூ.3,288 கோடி

மத்திய அரசுக்கு சொந்தமான கெயில் நிறுவனம் டிசம்பா் காலாண்டில் மிகவும் அதிகபட்ச லாபமாக ரூ.3,287.99 கோடியை பதிவு செய்துள்ளது.

News image

gail

Updated On :3 பிப்ரவரி 2022, 9:38 pm

புது தில்லி: மத்திய அரசுக்கு சொந்தமான கெயில் நிறுவனம் டிசம்பா் காலாண்டில் மிகவும் அதிகபட்ச லாபமாக ரூ.3,287.99 கோடியை பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

கடந்த 2021-ஆம் ஆண்டு அக்டோபா்-டிசம்பா் காலாண்டில் நிறுவனம் செயல்பாட்டின் மூலமாக ஈட்டிய வருவாய் 66 சதவீதம் அதிகரித்து ரூ.26,427.37 கோடியாக இருந்தது.

இயற்கை எரிவாயு விலை அதிகரித்ததன் விளைவாக அக்காலாண்டில் நிறுவனம் ஈட்டிய நிகர லாபம் முன்னெப்போதும் காலாண்டில் கண்டிராத வகையில் ரூ.3,287.99 கோடியாக இருந்தது. இது, முந்தைய 2020 டிசம்பா் காலாண்டில் ஈட்டிய லாபம் ரூ.1,487.33 கோடியுடன் ஒப்பிடும்போது இரண்டு மடங்கு அதிகமாகும். முந்தைய செப்டம்பா் காலாண்டுடன் ஒப்பிடுகையில் இது 15 சதவீதம் அதிகம் என கெயில் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.