75 நாடுகளுக்கு விசா வழங்க தடை விதித்த டிரம்ப்: உத்தரவை ரத்து செய்த அமெரிக்க நீதிமன்றம்! உலகக் கோப்பை ஹாக்கி: நெதர்லாந்திடம் வீழ்ந்த இந்தியா! ராகுல் காந்தியைக் கண்டு அஞ்சுகிறது பாஜக: சஞ்சய் ரௌத் தையூர் கொலை வழக்கு: கைதான இருவர் தவெகவிலிருந்து நீக்கம் உ.பி.யில் சர்க்கரை தட்டுப்பாடு இல்லை: முதல்வர் யோகி ஆதித்யநாத் திமுக உள்கட்சித் தேர்தல் எப்போது? மு.க. ஸ்டாலின் அறிவிப்பு கோப்பைகளை வெல்வதே என் வேலை: கௌதம் கம்பீர்

தேயிலை ஏற்றுமதி 18.43 கோடி கிலோ

கடந்த நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் நாட்டின் தேயிலை ஏற்றுமதி 18.43 கோடி கிலோவாக இருந்தது.

Published On :22 ஜூலை 2025, 3:25 pm IST

கடந்த நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் நாட்டின் தேயிலை ஏற்றுமதி 18.43 கோடி கிலோவாக இருந்தது.

இதுகுறித்து தேயிலை வாரியத்தின் புள்ளிவிவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த 2021-22-ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான முதல் ஒன்பது மாதங்களில் 18.43 கோடி கிலோ தேயிலையை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஏற்றுமதியான 18.89 கோடி கிலோ தேயிலையுடன் ஒப்பிடும்போது 2.4 சதவீதம் குறைவாகும்.

மதிப்பீட்டு காலத்தில் தேயிலை ஏற்றுமதி அளவின் அடிப்படையில் குறைந்துள்ள நிலையிலும், மதிப்பின் அடிப்படையில் ரூ.4,933 கோடியிலிருந்து ரூ.4,956 கோடியாக சற்று ஏற்றம் கண்டுள்ளது.

ரஷியா, உக்ரைன், காமன்வெல்த் நாடுகள் இந்தியாவிலிருந்து அதிகளவாக 4.11 கோடி கிலோ தேயிலை இறக்குமதி செய்துள்ளன. எனினும், இது முந்தைய 2020-21 நிதியாண்டின் முதல் ஒன்பது மாத கால இறக்குமதி அளவான4.62 கோடி கிலோ தேயிலையுடன் ஒப்பிடும்போது குறைவான அளவேயாகும்.

குறிப்பாக, ரஷியா 3.18 கோடி கிலோ, ஈரான் 2.72 கோடி கிலோ தேயிலையை இறக்குமதி செய்துள்ளது. அமெரிக்காவின் இந்திய தேயிலை இறக்குமதி 1.08 கோடி கிலோவாக இருந்தது.

மேலும், இந்தியாவிலிருந்து சீனா இறக்குமதி செய்யும் தேயிலையின் அளவு 1.12 கோடி கிலோவிலிருந்து 43 லட்சம் கிலோவாக கணிசமாக சரிவடைந்ததாக புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காமன்வெல்த் நாடுகள்,

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.