வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

ரயில்வேயிடமிருந்து ரூ.180 கோடி மதிப்புள்ள ஆர்டரை பெற்ற பிரைத்வைட்!

ரூ.180 கோடி மதிப்பில் 500 வேகன்கள் தயாரிக்க பிரைத்வைட் ஒப்பந்தம்

News image

பிரைத்வைட் நிறுவனம்

Updated On :18 பிப்ரவரி 2024, 2:41 pm

மத்திய பொதுத்துறை நிறுவனமான பிரைத்வைட் 500 ரயில் பெட்டிகளை வழங்க ரூ.180 கோடி மதிப்புள்ள ஆர்டரைப் ரயில்வேயிடமிருந்து பெற்றுள்ளது என்று நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரைத்வைட் நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான யதீஷ் குமார் தெரிவித்ததாவது:

இந்த மாதம் ரூ.180 கோடி மதிப்பிலான 500 வேகன்களுக்கான ஆர்டரை நாங்கள் பெற்றுள்ளோம். அதே வேளையில் 2018ல் வேகன்கள் வணிகத்தில் 95 சதவிகிதமாக இருந்த நிலையில், தற்போது அது 55 சதவீதமாக குறைந்துள்ளது. அதே வேளையில் டிசம்பர் 2023ல் ரூ.1,734 கோடியாக இருந்த மொத்த ஆர்டர் பைப்லைனை அதிகரிக்க நிறுவனம் முயற்சி எடுத்து வருகிறது.

சிவில் கட்டுமானம், பாலம் கிரேன்கள் கட்டுதல் அத்துடன் பராமரிப்பு நடவடிக்கைகள் சாத்தியமான நிலையில் கன்டெய்னர் உற்பத்தி, சோலார் பி.வி ஆலைகள் மற்றும் ரயில் நிலைய கட்டுமான ஒப்பந்தங்கள் ஆகியவை செயல்படுத்தப்படுகின்றன என்றார் யதீஷ் குமார்.

மத்திய பொதுத்துறை நிறுவனமான பிரைத்வைட் 500 ரயில் பெட்டிகளை வழங்க ரூ.180 கோடி மதிப்புள்ள ஆர்டரைப் ரயில்வேயிடமிருந்து பெற்றுள்ளது என்று நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரைத்வைட் நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான யதீஷ் குமார் தெரிவித்ததாவது:

இந்த மாதம் ரூ.180 கோடி மதிப்பிலான 500 வேகன்களுக்கான ஆர்டரை நாங்கள் பெற்றுள்ளோம். அதே வேளையில் 2018ல் வேகன்கள் வணிகத்தில் 95 சதவிகிதமாக இருந்த நிலையில், தற்போது அது 55 சதவீதமாக குறைந்துள்ளது. அதே வேளையில் டிசம்பர் 2023ல் ரூ.1,734 கோடியாக இருந்த மொத்த ஆர்டர் பைப்லைனை அதிகரிக்க நிறுவனம் முயற்சி எடுத்து வருகிறது.

சிவில் கட்டுமானம், பாலம் கிரேன்கள் கட்டுதல் அத்துடன் பராமரிப்பு நடவடிக்கைகள் சாத்தியமான நிலையில் கன்டெய்னர் உற்பத்தி, சோலார் பி.வி ஆலைகள் மற்றும் ரயில் நிலைய கட்டுமான ஒப்பந்தங்கள் ஆகியவை செயல்படுத்தப்படுகின்றன என்றார் யதீஷ் குமார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.