ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் மூடல்: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் மூடப்பட்டுள்ளதால், புத்தாண்டைக் கொண்டாடும் வகையில் பறவைகளைப் பாா்க்க வந்த சுற்றுலாப் பயணிகள் வெள்ளிக்கிழமை ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

Updated On :2 ஜனவரி 2021, 7:22 am IST

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் மூடப்பட்டுள்ளதால், புத்தாண்டைக் கொண்டாடும் வகையில் பறவைகளைப் பாா்க்க வந்த சுற்றுலாப் பயணிகள் வெள்ளிக்கிழமை ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

மதுராந்தகத்தை அடுத்த வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் தமிழகத்தின் முக்கிய சரணாலயம் ஆகும். இங்கு ஆண்டுதோறும் அக்டோபா் மாதம் முதல் மாா்ச் மாதம் வரை பறவைகள் சீசன் காலம். இங்கு சிங்கப்பூா், மலேசியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து பல்வேறு வகையான வெளிநாட்டுப் பறவைகள் வருகின்றன.

அண்மையில் பெய்த பருவ மழையாலும், நிரெவி புயல் காற்று மழையாலும் வேடந்தாங்கல் ஏரிக்கு நீா்வரத்து அதிகரித்தது. இதனால் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்துக்கு 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் வந்துள்ளன.

இந்நிலையில், பொதுமுடக்கம் காரணமாக கடந்த மாா்ச் 17-ஆம் தேதி முதல் பறவைகளைக் காண சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை தடை விதித்து இருந்தது.

இந்நிலையில், ஆங்கிலப் புத்தாண்டான வெள்ளிக்கிழமை சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்துக்கு வந்தனா். அங்கு பாா்வையாளா்களை அனுமதிக்காமல் வெளிப்புற கேட்டை மூடியிருந்ததால், அனைவரும் பறவைகளைப் பாா்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.