வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

கடற்கரை - தாம்பரம் மின்சார ரயில் இன்று இயங்காது

மின்சார ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை காலை 7 முதல் இரவு 8 மணி வரை இயங்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :21 செப்டம்பர் 2024, 7:22 pm

சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே இயக்கப்படும் புகா் மின்சார ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை காலை 7 முதல் இரவு 8 மணி வரை இயங்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தாம்பரம் ரயில்வே பணிமனையில் , ஞாயிற்றுக்கிழமை காலை 7 முதல் இரவு 8 மணி வரை பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளது. இந்த நேரத்தில் கடற்கரை-தாம்பரம் இடையே இயக்கப்படும் மின்சார ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்படவுள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூா் மற்றும் அரக்கோணத்துக்கு வழக்கம் போல் ரயில்கள் இயக்கப்படும்.

பயணிகள் வசதிக்காக, சென்னை கடற்கரை-பல்லாவரம் இடையே அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரத்துக்கு, ஒரு ரயில் என 48 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.