இயக்குநர் செல்வராகவனின் மனைவியும் இயக்குநருமான கீதாஞ்சலிக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது.
பிரபல இயக்குநர் செல்வராகவன், 2011-ல் கீதாஞ்சலியைத் திருமணம் செய்தார். 2012-ல் லீலாவதி என்கிற மகளும் 2013-ல் ஓம்கார் என்கிற மகனும் பிறந்தார்கள். மாலை நேரத்து மயக்கம் என்கிற படத்தை கீதாஞ்சலி இயக்கியுள்ளார்.
இந்நிலையில் 3-வது குழந்தைக்குத் தந்தையாகியுள்ளார் இயக்குநர் செல்வராகவன். குழந்தைக்கு ரிஷிகேஷ் எனப் பெயரிட்டுள்ளதாக இன்ஸ்டகிராமில் கீதாஞ்சலி தெரிவித்துள்ளார். குழந்தை நலமாகவும் ஆரோக்கியமாகவும் உள்ளது. அனைவருடைய வாழ்த்துகளுக்கும் நன்றி என்றும் அவர் கூறியுள்ளார்.
தனுஷ் - செல்வராகவன் - யுவன் கூட்டணி மீண்டும் இணைகிறது. இதற்கான அறிவிப்பை செல்வராகவன் சமீபத்தில் வெளியிட்டார். இப்படத்தைத் தாணு தயாரிக்கிறார். 8-வது முறையாக யுவனுடன் இணைகிறார் செல்வராகவன். ஒளிப்பதிவு - அரவிந்த் கிருஷ்ணா. இப்படத்தின் புகைப்படப் பணிகள் தொடங்கியுள்ளன. இதுகுறித்த அறிவிப்பை செல்வராகவனும் தாணுவும் வெளியிட்டார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கருப்பு வெளியாகுமா? ஆகாதா? தயாரிப்பாளரைத் தாக்கும் ரசிகர்கள்!

சீனாவில் ஷி ஜின்பிங்குடன் டிரம்ப் சந்திப்பு!
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் சித்திரை தேரோட்டம்!

தங்கம் விலை இன்றும் (மே 14) உயர்வு! எவ்வளவு?
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

