சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனக்குச் சொந்தமான அடுக்குமாடிக் குடியிருப்பில் வாடகைக்கு இருந்து வரும் இருவரை வெளியேற்றக் கோரி விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் நடிகர் விஜய் புகார் அளித்துள்ளார்.
நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தில் செயலாளராக இருந்த ரவிராஜா மற்றும் துணைச் செயலாளராக இருந்த ஏ.சி. குமார் ஆகிய இருவரும் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. நீக்கப்பட்ட இருவரும் சென்னை சாலிகிராமத்தில் உள்ள நடிகர் விஜய்க்குச் சொந்தமான அடுக்குமாடிக் குடியிருப்பில் பல ஆண்டுகளாக வாடகைக்கு வசித்து வந்தார்கள். இயக்கத்திலிருந்து நீக்கப்பட்டதால் இருவரும் வீட்டைக் காலி செய்யும்படி விஜய் கூறியுள்ளார். ஆனால் அவர்கள் வீட்டைக் காலி செய்யாமல் இருந்துள்ளார்கள்.
இதையடுத்து, தனக்குச் சொந்தமான அடுக்குமாடிக் குடியிருப்பில் வாடகைக்கு இருந்து வரும் ரவிராஜா, குமார் ஆகிய இருவரையும் வெளியேற்றக் கோரி விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் நடிகர் விஜய் தரப்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வெளியானது 'தி ரைஸ் ஆஃப் ஜிடிஎன்' பாடல்!

தமிழகம், புதுச்சேரி காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!

1000 ஆண்டு பழமையான பிரதமர் மோடி வழிபாடு - புகைப்படங்கள்

வீடுகளுக்குள் எதிர்பாராத வகையில் புகுந்த வெள்ள நீர்!
விடியோக்கள்

வெளியானது 'தி ரைஸ் ஆஃப் ஜிடிஎன்' பாடல்!

தமிழ்நாட்டில் மட்டும் ஏன் அருவருப்பான அரசியல்?: Thirumavalavan | VCK | DMK | TVK



