பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.71 ஆக நிறைவு!சென்செக்ஸ், நிஃப்டி ஏற்றத்துடன் நிறைவு!!காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்புதங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு! மாலை நிலவரம்! (ஆக.21)

பாசக்கார நண்பர்கள்

"தம்பி அர்ஜுனா' படத்தில் நடித்த பெரோஸ்கான் இயக்கும் படம் "பாசக்கார நண்பர்கள்'. அவரது மகன் அஜ்மல்கான் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக திவ்யாநாகேஷ் நடிக்கிறார். ராதாரவி, பாலாசிங், வெண்ணிற ஆடை மூர்த்

Published On :28 டிசம்பர் 2023, 10:51 pm IST

"தம்பி அர்ஜுனா' படத்தில் நடித்த பெரோஸ்கான் இயக்கும் படம் "பாசக்கார நண்பர்கள்'. அவரது மகன் அஜ்மல்கான் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக திவ்யாநாகேஷ் நடிக்கிறார். ராதாரவி, பாலாசிங், வெண்ணிற ஆடை மூர்த்தி உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்கள் ஏற்கிறார்கள். படம் குறித்து பெரோஸ்கான் கூறியது, ""பள்ளி மாணவனின் லட்சியம்தான் கதை. தன் நண்பர்களுக்கு உதவி செய்யும் நோக்கத்தில் உலக அளவில் நடக்கும் குத்துச் சண்டை போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற நினைக்கிறான் ஹீரோ. ஆதரவற்ற நிலையில் இருக்கும் அவன் தன் லட்சியத்தை அடைய மேற்கொள்ளும் முயற்சிகளும், அதற்கு ஏற்படும் தடைகளை உடைத்தெறிவதும்தான் கதை. குத்துச் சண்டை பயிற்சியாளராக நான் நடிக்கிறேன். நம் நாட்டில் குத்துச் சண்டை பெரும் அளவுக்கு பிரபலம் அடையவில்லை. அதனை சொல்லி தரும் பயிற்சியாளர்களும் குறைவுதான். அஜ்மல்கான் இதற்காக பிரத்யேக பயிற்சிகளை எடுத்துள்ளார். ஹாலிவுட் தரத்துக்கு சண்டை காட்சிகளை உருவாக்கியிருக்கிறோம். காரத்தே பயிற்சியாளர் ஹூசைனியிடம் சிறப்பு பயிற்சி பெற்றார். மாணவர்களின் வலிமையை சொல்லும் திரைக்கதையாக இது அமைந்திருக்கிறது. மே 6-ம் தேதி படம் திரைக்கு வருகிறது'' என்றார் பெரோஸ்கான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.