ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஏ சான்றிதழுக்காக கவலைப்படவில்லை: ஜி.வி. பிரகாஷ் பேட்டி

ஒவ்வொரு தலைமுறையிலும் ஒரு போல்ட்டான படம் வெளிவரும். த்ரிஷா இல்லனா நயன்தாரா அதுபோன்ற ஒரு படம்தான்.

News image
Updated On :16 செப்டம்பர் 2015, 8:57 am

ஐஏஎன்எஸ்

இந்தத் தலைமுறையின் மிகவும் போல்ட் ஆன படம், த்ரிஷா இல்லனா நயன்தாரா என்று கூறியுள்ளார் இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ்.

த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தில் ஜி.வி. பிரகாஷ், ஆனந்தி, மனிஷா யாதவ், சிம்ரன் ஆகியோர் நடிக்கிறார்கள். ஆதிக் ரவிச்சந்திரன் என்கிற அறிமுக இயக்குநர் இயக்குகிறார்.

நாளை படம் வெளியாகிறது. இப்படத்தின் கதாநாயகன் ஜி.வி. பிரகாஷ் கூறும்போது:

ஒவ்வொரு தலைமுறையிலும் ஒரு போல்ட்டான படம் வெளிவரும். த்ரிஷா இல்லனா நயன்தாரா அதுபோன்ற ஒரு படம்தான். இந்தத் தலைமுறையின் மிகவும் போல்ட் ஆன படம். படத்தின் தன்மை பற்றி முதலிலேயே தெரிந்ததால் தணிக்கையில் ஏ சான்றிதழ் கிடைத்தபோது நாங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இது இளைஞர்களைக் கருத்தில்கொண்டு எடுக்கப்பட்ட படம். முக்கியமாக கல்லூரிக்குச் செல்கிறவர்கள்.

படம் எப்படி எடுக்கப்படவேண்டுமோ அப்படித்தான் எடுக்கவேண்டும் என்று எண்ணினோம். ஏ சான்றிதழைப் பற்றி கவலைப்படவில்லை. யூ சான்றிதழுக்காக கதையை மாற்றினால் ரசிகர்கள் ஏமாற்றப்பட்டது போல உணர்வார்கள். டெல்லி பெல்லி ரீமேக் போல. இந்தப் படத்தினால் தமிழில் மேலும் போல்ட் ஆன படங்கள் வெளிவரும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.