காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய் மதுரை மேலூர் அருகே கார் விபத்தில் 5 பேர் பலி, 3 பேர் காயம் நீர்வரத்து இல்லாததால் தஞ்சை மாவட்டத்தில் களையிழந்த ஆடிப்பெருக்கு விழா! தங்கம் விலை உயர்ந்தது! எவ்வளவு தெரியுமா? வெள்ளி விலை? (ஆக. 3) கபினியில் நீர்த் திறப்பு 27,000 கன அடியாக உயர்வு
/

வாடிவாசலில் களமிறங்கும் இயக்குநர் அமீர்

வாடிவாசலில் களமிறங்கும் இயக்குநர் அமீர்

News image

வாடிவாசலில் களமிறங்கும் இயக்குநர் அமீர்

Updated On :28 ஜனவரி 2024, 9:12 am IST

நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த வருடம் வெளியான ’சூரரைப் போற்று’ ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதைத்தொடர்ந்து நடிகர் சூர்யா தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர் தயாரிப்பில் உருவாகி வரும் புதிய படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இதற்கிடையில் கடந்த வருடம் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில்  இயக்குநர்  வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும்  புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியிருந்தது. அப்போது படத்தின் தலைப்பு 'வாடிவாசல் ' என்று மட்டுமே அறிவிக்கப்பட்டிருந்தது. 

சில நாட்களுக்கு முன்  வாடிவாசல் திரைப்படத்தின்  முதல் பார்வை வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவந்த நிலையில் அந்தப்  படத்தில் இயக்குநர் அமீர் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான 'வடசென்னை' படத்தில் ராஜன் என்கிற  முக்கியக் கதாபாத்திரத்தில் அமீர் நடித்திருந்தார். படம் வெளியான பின்  அந்தக் கதாப்பாத்திரத்திற்காகவே அதிகம் பேசப்பட்டார்.  தற்போது  வாடிவாசல் படத்தில் மீண்டும் வெற்றிமாறனுடன் இணைய இருப்பதால்   ரசிகர்கள் மத்தியில் பெரிய ஆவல் எழுந்துள்ளது.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.