உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

வாடிவாசலில் களமிறங்கும் இயக்குநர் அமீர்

வாடிவாசலில் களமிறங்கும் இயக்குநர் அமீர்

வாடிவாசலில் களமிறங்கும் இயக்குநர் அமீர்

Published On :

நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த வருடம் வெளியான ’சூரரைப் போற்று’ ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதைத்தொடர்ந்து நடிகர் சூர்யா தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர் தயாரிப்பில் உருவாகி வரும் புதிய படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இதற்கிடையில் கடந்த வருடம் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில்  இயக்குநர்  வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும்  புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியிருந்தது. அப்போது படத்தின் தலைப்பு 'வாடிவாசல் ' என்று மட்டுமே அறிவிக்கப்பட்டிருந்தது. 

சில நாட்களுக்கு முன்  வாடிவாசல் திரைப்படத்தின்  முதல் பார்வை வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவந்த நிலையில் அந்தப்  படத்தில் இயக்குநர் அமீர் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான 'வடசென்னை' படத்தில் ராஜன் என்கிற  முக்கியக் கதாபாத்திரத்தில் அமீர் நடித்திருந்தார். படம் வெளியான பின்  அந்தக் கதாப்பாத்திரத்திற்காகவே அதிகம் பேசப்பட்டார்.  தற்போது  வாடிவாசல் படத்தில் மீண்டும் வெற்றிமாறனுடன் இணைய இருப்பதால்   ரசிகர்கள் மத்தியில் பெரிய ஆவல் எழுந்துள்ளது.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.