தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மீண்டும் இணையும் விஜய் - ஏ.ஆர். முருகதாஸ்! தயாரிப்பு - சன் பிக்சர்ஸ்!

அக்டோபர் முதல் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. ஏப்ரலில் படம் வெளிவர வாய்ப்புள்ளதாக...

News image
Updated On :26 ஜூன் 2017, 10:55 am

எழில்

துப்பாக்கி, கத்தி படங்களுக்குப் பிறகு மீண்டும் இணையவுள்ளார்கள் விஜய்யும் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸும்.

அட்லி இயக்கும் மெர்சல் படத்தில் தற்போது நடித்துவருகிறார் விஜய். இதற்கடுத்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். மூன்றாவது முறையாக இருவரும் இணையும் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது. அக்டோபர் முதல் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. ஏப்ரலில் படம் வெளிவர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரவுள்ளது.

மகேஷ் பாபு நடிக்கும் ஸ்பைடர் படத்தை இயக்கி வருகிறார் ஏ.ஆர். முருகதாஸ். இதில் ராகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே சூர்யா, ஆர்.ஜே. பாலாஜி உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகிவருகிறது. இசை, ஹாரிஸ் ஜெயராஜ்; ஒளிப்பதிவு, சந்தோஷ் சிவன். செப்டம்பர் 29 அன்று இப்படம் வெளிவரவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.