இளையராஜா ராயல்டி கேப்டது நியாயமற்ற பேச்சு: எஸ்.ஏ. சந்திரசேகர்

அந்த காலகட்டத்தில் நடைபெற்ற கச்சேரிகளில் அவர் பிறர் இசையமைத்த படங்களில் உள்ள பாடல்களையும் பாடினார்...
இளையராஜா ராயல்டி கேப்டது நியாயமற்ற பேச்சு: எஸ்.ஏ. சந்திரசேகர்
Updated on
1 min read

இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், கன்னியாகுமரியில் தனியார் கல்லூரி நிகழ்வில் பங்கேற்றார். அப்போது அவர் இளையராஜா - எஸ்பிபி விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இசையமைப்பாளர் இளையராஜா மிகச் சிறந்த கலைஞர் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. அவரின் முதல் படமான அன்னக்கிளி வெளிவந்த பின்னர், தொடர்ந்து இசைக் கச்சேரிகளை நடத்தி வந்தார். அவரது இசைக் கச்சேரியில் எனது மனைவி ஷோபாவும் பங்கேற்று வந்தார். ஒரு படத்துக்கு மட்டுமே இசையமைத்திருந்த அந்த காலகட்டத்தில் நடைபெற்ற கச்சேரிகளில் அவர் பிறர் இசையமைத்த படங்களில் உள்ள பாடல்களையும் பாடினார். அப்போது அவர் யாருக்கெல்லாம் ராயல்டி கொடுத்தார்? தற்போது அவர் ராயல்டி கேட்பது நியாயமற்ற பேச்சு என்பது எனது கருத்து என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com