மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தமிழ் சினிமாவுக்கு மணிமண்டபம் கட்டி விடாதீர்கள்: முதல்வருக்கு விஷால் வேண்டுகோள்! 

கூடுதல் கேளிக்கை வரிவிதிப்பு முறையால் தமிழ் சினிமாவுக்கு மணிமண்டபம் கட்டி விடாதீர்கள் என்று  தமிழக முதல்வருக்கு, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர்  விஷால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News image
Updated On :4 அக்டோபர் 2017, 1:33 pm

DIN

சென்னை: கூடுதல் கேளிக்கை வரிவிதிப்பு முறையால் தமிழ் சினிமாவுக்கு மணிமண்டபம் கட்டி விடாதீர்கள் என்று  தமிழக முதல்வருக்கு, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர்  விஷால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜிஎஸ்டி  மற்றும் கேளிக்கை வரி என இரட்டை வரிவிதிப்பு முறையின் காரணமாக அதிக அளவில் பொருளாதாரச் சுமை ஏற்படுவதாகக் கூறி, வரும் வெள்ளிக்கிழமை முதல் புதிய திரைப்படங்கள் எதுவும் வெளியாகாது என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவித்தது.

இந்நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர்  விஷால் சென்னையில் இன்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்பொழுது அவர் கூறியதாவது:

தமிழ் சினிமாவினைப் பொறுத்த வரை பல்வேறு விதமாக தயாரிப்புச் செலவு உயர்வு என மிகுந்த நெருக்கடியில் இருந்து வருகிறோம். இந்நிலையில் மத்திய அரசின் 28% ஜிஎஸ்டி வரியுடன், தமிழக அரசின்    மாற்றி அமைக்கப்பட்ட 10% கேளிக்கை வரி என்பது கூடுதல் சுமையாக அமைந்து விடும். இதன் காரணமாக நாங்கள் செயல்படவே இயலாத நிலை ஏற்பட்டு விடும்.

கர்நாடகா மற்றும் பெங்கால் உள்ளிட்ட பல மாநிலங்களில் வசூலிக்கப்படும் வரியில் 10% மீண்டும் திரைத்துறைக்கே தள்ளுபடியாக தரப்படுகிறது. பெரும்பாலான மாநிலங்களில் இதுதான் நிலைமை. தமிழகமும் அது போல திரைத்துறைக்கு உதவும் என்று நினைக்கிறேன். கூடுதல் கேளிக்கை வரிவிதிப்பு முறையால் தமிழ் சினிமாவுக்கு மணிமண்டபம் கட்டி விடாதீர்கள்

எனவே பல்வேறு நெருக்கடிகளினிடையே வேறு வழி இல்லாமல், மிகுந்த வலியுடன்தான் வரும் வெள்ளிக்கிழமை முதல் புதிய திரைப்படங்கள் எதுவும் வெளியாகாது என்ற முடிவை எடுத்துள்ளோம். ஏற்கனவே முதல்வரை சந்தித்து எங்கள் தரப்பினை விளக்கியுள்ளோம். நாளை மீண்டும் சந்திக்க உள்ளோம். நல்ல முடிவினை அரசு தரப்பிலிருந்து எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.

இவ்வாறு விஷால் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.