சமந்தா திருமணத்துக்கு முன்னர் கொடுத்த பேட்டிகளில் திருமணம் முடிந்த ஒருசில நாட்களிலேயே படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருப்பதாகவும் தொடர்ந்து நடிப்பதாகவும் கூறியிருந்தார். பாலிவுட்டில் கரீனா கபூர், வித்யா பாலன், ராணி முகர்ஜி போன்ற பிரபல நடிகைகள் திருமணத்துக்குப் பின்னர் முன்னணி நாயகிகளாக நடித்து வெற்றி பெற்றுள்ளனர்.
இந்நிலையில் சமந்தா திருமணத்திற்கு பிறகும் நடிப்பேன் என்று கூறியிருந்ததை ஒரு நாளிதழில் படித்த கஸ்தூரி தனது டிவிட்டரில் அப்பத்திரிகையைக் கண்டிக்கும் விதமாக ‘திருமணத்துக்கு பிறகு தொடர்ந்து நடிப்பேன் என்று சமந்தா அறிவித்து உள்ளார், அது என்ன? நாகசைதன்யாவை இந்த கேள்வி ஏன் கேட்கல’ என்று டிவீட் செய்திருந்தார்.