அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

திருமணத் தேதிக்கு முன்னாலேயே மணப்பெண் ஆனாரா சமந்தா?!

சமந்தா வெவ்வேறு மொழிப் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். ஆனால் இதற்கிடையே

News image
Updated On :11 செப்டம்பர் 2017, 11:10 am

DIN

சமந்தா வெவ்வேறு மொழிப் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். ஆனால் இதற்கிடையே சமீபத்தில் மணமகள் தோற்றத்தில் விளம்பரப் படமொன்றில் நடித்துள்ளார். சொந்த வாழ்க்கையிலும் விரைவில் மணப்பெண்ணாகப் போகும் சமந்தாவின் இந்த அழகான தோற்றம் அதற்கான முன்னோட்டமாக அமைந்துவிட்டது. திருமண தினத்தன்று சமந்தா எப்படி இருப்பார் என்பதை முன்கூட்டியே தெரிவிக்கும்படியாக விதவிதமான மணப்பெண் ஆடைகளில் ஜொலித்தார் சமந்தா. 

Story image
Story image

சமந்தா நாக சைதன்யா ஜோடியின் திருமணம் அக்டோபரில் நடைபெறவுள்ளது. அதுவரை அவர்கள் இருவரும் ஒப்பந்தமாகிய படங்களில் நடித்து வருகின்றனர். ஒரு பக்கம் மணமகள் சமந்தா தமிழில் விஜயுடன் 'மெர்சல்' படத்திலும், தெலுங்கில் மாமனார் நாகார்ஜுனாவுடன் 'ராஜுகாரி கதி 2’ என்ற படத்திலும் நடித்து வருகிறார்.  இன்னொரு பக்கம், நாக சைதன்யாவின் சமீபத்திய படமான யுத்தம் சரணம் அவருக்கு பாக்ஸ் ஆபிஸில் நல்ல பெயர் பெற்றுத் தந்துள்ளது.

Story image

சமந்தா தங்களுடைய காதல் விவகாரத்தை வீட்டில் தெரிவிக்காவிட்டால் ராக்கி கட்டிவிடுவேன் என்று பயமுறுத்தவே, அதனால்தான் உடனடியாக பெற்றோரிடம் சொல்லி திருமணத்துக்கு சம்மந்தம் வாங்கினேன் என்று நாகா சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறினார்.

Story image

'நாங்கள் 2009 -ம் ஆண்டில் 'ஏ மாயா சேஸாவே' படத்தில் நடிக்கும் போது காதலிக்கத் தொடங்கினோம். எங்கள் காதல் வாழ்க்கை மிகவும் நன்றாக போய்க் இருந்தது. சாம் அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்த போதும் வீட்டில் எங்கள் விஷயத்தைப் பற்றிப் பேசத் தாமதப்படுத்திக் கொண்டிருந்தேன். ஒரு நாள், நாங்கள் சாதாரணமாக பேசிக்கொண்டிருந்தபோது, என் பெற்றோரிடம் காதல் விஷயத்தைச் சொல்லா விட்டால், எனக்கு 'ராக்கி' கட்டிவிடுவதாக சாம் பயம் காட்டினாள். எனக்கு ஒரே அதிர்ச்சி! வேறு வழியில்லாமல், உடனடியாக என் பெற்றோரிடம் எங்கள் காதலைப் பற்றி பேசி, திருமணத்துக்கு அவர்களது ஒப்புதல் கிடைத்தது’ என்று நாகா கூறினார்.

Story image

நாக சைதன்யா தற்போது பிரேமம் பட இயக்குனர் சந்து மந்தேட்டியின் இரண்டாவது படமான சாவ்யாசச்சியில் நடிக்கிறார். 
 
நாகா சமந்தாவின் திருமணம் முதலில் தனிப்பட்ட குடும்ப நிகழ்ச்சியாகவும் அதன்பின் டெஸ்டினேஷன் வெட்டிங்காகாவும் இரண்டு வகையில் கொண்டாடடப் போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. திருமணம் முடிந்து மூன்று நாட்களுக்குப் பிறகு, இந்த நட்சத்திர ஜோடி அவரவர் படப்பிடிப்புகளில் கலந்து கொண்டு மீண்டும் வேலைக்குத் திரும்ப திட்டமிட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.