மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

சாஹூ: பிரபாஸுக்கு ரூ. 30 கோடி சம்பளம்; ஷ்ரதா கபூருக்கு ரூ. 9 கோடி!

ரூ. 150 கோடி செலவில் உருவாகும் சாஹூ படத்தில் பிரபாஸின் சம்பளம், ரூ. 30 கோடி என்று...

News image
Updated On :15 ஆகஸ்ட் 2017, 10:36 am

பாகுபலி புகழ் நடிகர் பிரபாஸின் அடுத்தப் படம் - சாஹூ. சுஜீத் இயக்கத்தில் ரூ. 150 கோடி பட்ஜெட்டில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகி வருகிறது. யூவி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்துக்கு இசை - ஷங்கர்-இசான்-லாய். பாகுபலி 2 படத்துக்குப் பிறகு பிரபாஸ் நடிக்கும் படம் என்பதால் சாஹூ படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. 

இந்நிலையில் சாஹூ படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகையான ஷ்ரதா கபூர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

பிரபாஸின் முதல் ஹிந்திப் படமாக சாஹூ குறிப்பிடப்படுவதால், இது ஹிந்தியில் டப் செய்யப்படுவதற்குப் பதிலாக தெலுங்கு, தமிழ் போல ஹிந்தியிலும் தனியாகப் படமாக்கப்படுகிறது. மேலும், ஷ்ரதா கபூர் நடிக்கும் முதல் தென்னிந்தியப் படம் சாஹூ என்றும் கூறலாம்.

இந்நிலையில் பாகுபலி படத்துக்குப் பிறகு பிரபாஸின் சம்பளம் குறித்து பல்வேறு தகவல் வெளிவருகின்றன. ரூ. 150 கோடி செலவில் உருவாகும் சாஹூ படத்தில் பிரபாஸின் சம்பளம், ரூ. 30 கோடி என்று சமீபத்திய தகவல் தெரிவிக்கிறது. இந்தப் படம் 3 மொழிகளில் உருவாவதாலும் பாகுபலி படத்துக்குப் பிறகு இந்தியா முழுக்க பிரபாஸுக்கென ஒரு வர்த்தகம் உருவாகியிருப்பதாலும் தயாரிப்பாளர் இந்தப் பெரிய சம்பளத்துக்கு ஒப்புக்கொண்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

எனில் கதாநாயகி ஷ்ரதாவுக்கு? மூன்று மொழிகளில் உருவாகும் படத்துக்கு ரூ. 12 கோடி கேட்டுள்ளார் ஷ்ரதா. ஆனால் அதற்கு தயாரிப்பாளர் ஒப்புக்கொள்ளவில்லை. இறுதியில் ரூ. 9 கோடி என முடிவு செய்யப்பட்டுள்ளது. பிரபாஸ் படம் என்பதால் அதற்குக் கிடைக்கவுள்ள பேர், புகழையும் கணக்கிட்டு ஷ்ரதா இதற்கு ஒப்புக்கொண்டார் என்று கூறப்படுகிறது.

மிகப்பெரிய நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் கைகோர்த்துள்ளதால் இந்தப் படம் பாகுபலிக்கு நிகராக கவனம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.