நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

ரசிகர்களைத் தூங்கவிடுங்கள்: நள்ளிரவில் வெளியிடப்படும் டிரெய்லர்களுக்கு தனஞ்ஜெயன் எதிர்ப்பு!

பிரபல நடிகர்களின் இயக்குநர்களுக்கு ஒரு வேண்டுகோள். உங்கள் ரசிகர்களைத் தூங்கவிடுங்கள்...

News image
Updated On :17 ஆகஸ்ட் 2017, 11:10 am IST

நள்ளிரவில் வெளியிடப்படும் பெரிய நடிகர்களின் டிரெய்லர், டீசர்களுக்குப் படத்தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அவர் எழுதியதாவது:

பிரபல நடிகர்களின் இயக்குநர்களுக்கு ஒரு வேண்டுகோள். உங்கள் ரசிகர்களைத் தூங்கவிடுங்கள். மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களின் டிரெய்லர்கள், டீசர்களைக் காலையில் வெளியிடுங்கள். நள்ளிரவு 12.01 மணிக்கு வெளியிடுவது நல்லதல்ல என்று அறிவுரை கூறியுள்ளார்.

சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விவேகம் பட டிரெய்லர் நேற்று நள்ளிரவு 12.01 மணிக்கு வெளியிடப்பட்டது. இதனால் அஜித் ரசிகர்கள் காத்திருந்து டிரெய்லரைக் கண்டுகளித்தார்கள். பிறகு அதைச் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்தும் மகிழ்ந்தார்கள். இதேபோல பெரிய நடிகர்களின் படங்களின் டிரெய்லர், டீசர், பாடல்கள் ஆகியவை பெரும்பாலும் நள்ளிரவில் வெளியிடுவது வழக்கம்.  இதையடுத்து தனஞ்ஜெயன் இந்த வேண்டுகோளையும் எதிர்ப்பையும் பதிவு செய்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.