12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

கமலுக்கு ஒரு பிரச்னை என்றால் திரையுலகம் பின்னால் நிற்கும்: விஷால் பேட்டி

தவறான நிகழ்ச்சியாக இருந்தால் கண்டிப்பாக கமல் பங்கேற்கமாட்டார்... 

Published On :

தமிழ்த் திரைப்படத் துறையில் சிறந்த படம், நடிகர், நடிகை, தொழில்நுட்பக் கலைஞர்களுக்கான விருதுகளை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று அறிவித்தார். 2009-ஆம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டு வரை ஆறு ஆண்டுகளுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, 2009-ஆம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டு வரையிலான விருதுகளின் பெயர்ப் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இதற்காக, தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வரைச் சந்தித்து விஷால் நன்றி தெரிவித்தார். பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 

திரைப்பட விருதுகள் அறிவித்ததற்கு அரசுக்கு நன்றி. இனி தாமதம் இல்லாமல் வருடந்தோறும் திரைப்பட விருதுகள் வழங்க வேண்டும் என்று அரசுக்குக் கோரிக்கை வைக்கிறோம். திரைப்படங்களுக்கு மானியம் வழங்கியதால் சிறு தயாரிப்பாளர்களுக்கு நன்மை கிடைத்துள்ளது. 

பிக் பாஸ் சர்ச்சை குறித்துக் கேட்கிறீர்கள். கமல் சார் ஒரு விஷயத்தில் இறங்கினால், அது பற்றி முழுமையாக தெரிந்துகொண்டுதான் இறங்குவார். பிக்பாஸ் சர்ச்சை எல்லாம் விஷயமே இல்லை. பிக் பாஸ் என்பது ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சி. தவறான நிகழ்ச்சியாக இருந்தால் கண்டிப்பாக கமல் பங்கேற்கமாட்டார். அதேசமயம் திரையுலகுக்கு முன்னுதாரணமாக இருக்கும் கமலை அமைச்சர் ஒருமையில் பேசியிருந்ததைத் தவிர்த்திருக்கலாம். கமல்ஹாசனுக்கு ஒரு பிரச்னை என்றால் திரையுலகமே பின்னால் நிற்கும் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.