உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும்! சென்னை உயர் நீதிமன்றம்!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது நடவடிக்கையில் சந்தேகம்: எடப்பாடி பழனிசாமிஉதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
/

காஜல் அகர்வாலின் 50-வது திரைப்படம்!

'இன்று (ஜூன் 19) நடிகை காஜல் அகர்வாலுக்குப் பிறந்த நாள். காஜலுக்கு இப்போது 32

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 3:32 pm IST

'இன்று (ஜூன் 19) நடிகை காஜல் அகர்வாலுக்குப் பிறந்த நாள். காஜலுக்கு இப்போது 32 வயதாகிறது. லஷ்மி கல்யாணம் என்ற தெலுங்குத் திரைப்படத்தில் 2007-ம் வருடம் கதாநாயகியாக அறிமுகமானார் காஜல். தொடர்ந்து தமிழ், இந்தி, மலையாளம் என்று பன்மொழிப் படங்களில் முன்னனி ஹீரோக்களுடன் நடித்த காஜல் அகர்வால் தற்போது தெலுங்கில் தேஜா இயக்கும் ‘நேனே ராஜு நேனே மந்திரி’படத்தில் நடிக்கிறார். 

Story image

காஜல் அகர்வாலுக்கு இது 50-வது திரைப்படம். இதில் ராணா ஹீரோவாக நடிக்கிறார். இத்திரைப்படத்தில் அவருடன் கேத்ரின் தெரசா, அசுதோஷ் ராணா, நவ்தீப், ஆகியோர் நடிக்கின்றனர். படத்தைப் பற்றி காஜல் கூறும் போது 'நான் ஹீரோயினாக நடிக்க ஆரம்பித்து பத்து வருடங்கள் ஆகிவிட்டது. அது தேஜா இயக்கத்தில் அமைந்தது பெரும் மகிழ்ச்சி. காரணம் என்னுடைய முதல் படத்தின் இயக்குனர் தேஜா தான். அவர்தான் சினிமா பற்றி எனக்கு பல விஷயங்களை கற்றுக் கொடுத்தவர்.

Story image

'நேனே ராஜு நேனே மந்திரி'யில் எனக்கு ஜோடியாக நடிப்பவர் ராணா. அவர் என் நண்பரும் கூட. அவருடன் பணியாற்றுவது மகிழ்ச்சி. நண்பர்களுடன் வேலை செய்வது வேலையை எளிதாக்கும். ஒரே சமயத்தில் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் இந்தப் படம் வெளியாக உள்ளது எனக்கு மகிழ்ச்சியான விஷயம்' என்றார் காஜல்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.