யுபிஐ கட்டணம்! 40 காசு செலுத்தினால் செத்துவிட மாட்டீர்கள் - நீதி ஆயோக் துணைத் தலைவர்செய்யறிவு பயன்படுத்தி சிக்கிய மாணவர் தற்கொலை! ஐஐடி-மும்பை வளாகத்தில் போராட்டம்புரட்டாசி முதல் சனிக்கிழமை! காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் குவிந்த பக்தர்கள்!!ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இன்று தொடக்கம்11 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு7 பேருந்து பணிமனைகளில் சாா்ஜிங் வசதிக்கு ரூ.300 கோடி: தில்லி அரசு ஒப்புதல்ஆந்திரத்தில் ரூ.15,000 கோடியில் புதிய கப்பல் கட்டும் தளம்: எம்டிஎல் நிறுவனம் ஒப்பந்தம்திருப்பதி - சென்னை கடற்கரைக்கு செப். 20-இல் முன்பதிவில்லாத ரயில்

ப்ரியங்கா உபேந்திரா நடிக்கும் ‘ஹெளரா பிரிஜ்’ திரில்லர் படம், உண்மைச் சம்பவமாம்!

இதோ அடுத்ததாக ‘ஹெளரா ப்ரிஜ்’  எனும் த்ரில்லர் திரைப்படம் மூலம் ப்ரியங்கா மீண்டும் வெள்ளித்திரையில் தரிசனம் தரவிருக்கிறார். தமிழில் அல்ல, கன்னடத்தில்.

Published On :

கன்னட நடிகர் உபேந்திராவின் மனைவி ப்ரியங்கா திரிவேதி, தமிழிலும் ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார். அஜித்துடன் அவர் நடித்த ‘ராஜா; திரைப்படத்தில் முதல் நாயகியான ஜோதிகாவைக் காட்டிலும், படத்தின் சில காட்சிகளில் மட்டுமே இடம்பெற்றிருந்த இரண்டாம் நாயகியான ப்ரியங்காவுக்கு வரவேற்பு அதிகமிருந்தது. ப்ரியங்கா, விக்ரமுடன் ஜோடியாக நடித்த ’காதல் சடுகுடு; திரைப்படத்தில் கூட ப்ரியங்காவுக்கு ரசிகர்களது ஆதரவு அமோகமாகவே இருந்தது. ஆனால் என்ன காரணத்தாலோ, பிற மொழிப்படங்களில் தொடர்ந்து நடிப்பதில் அவர் ஆர்வம் காட்டவில்லை. 

இடையில் நடிகர் உபேந்திராவுடன் திருமணம் ஆன பின்னர் கோலிவுட்டை முற்றிலுமாக மறந்து விட்டார் ப்ரியங்கா. அருண் விஜயுடன் நடித்திருந்த ‘ஜனனம்’ திரைப்படத்திற்குப் பிறகு தமிழில் காணாமல் போயிருந்த ப்ரியங்கா, குடும்பம், கணவர், குழந்தைகள் என்று செட்டிலான பின், சமீபத்தில் ரீஃபைண்டு ஆயில் விளம்பரம் ஒன்றின் மூலம் மீண்டும் கண்களில் தட்டுப்பட்டார். இதோ அடுத்ததாக ‘ஹெளரா ப்ரிஜ்’  எனும் த்ரில்லர் திரைப்படம் மூலம் ப்ரியங்கா மீண்டும் வெள்ளித்திரையில் தரிசனம் தரவிருக்கிறார். தமிழில் அல்ல, கன்னடத்தில். சென்னையிலிருந்து, கொல்கத்தாவுக்கு ஜாகை மாறிச் செல்லும் அம்மா மற்றும் மகளைப் பற்றியதான இந்தக் கதையில் ப்ரியங்கா, சிங்கிள் பேரன்ட்டாக நடித்திருக்கிறார். மகளாக பேபி ஐஸ்வர்யா நடித்திருக்கிறார். அம்மாவும், மகளும் கொல்கத்தாவுக்கு இடம் பெயர்கையில் அங்கே மகளைப் பறிகொடுத்து விட்டு, காணாமல் போன தன் மகளை ஒற்றை ஆளாக ப்ரியங்கா எப்படி மீட்கிறார் என்பது தான் இந்த த்ரில்லர் திரைப்படத்தின் அவுட்லைன். இப்படத்தின் தயாரிப்பாளர் ஜேஎஸ்கே, படம் பார்க்கும் ரசிகர்களை, சீட் நுனிக்கு வர வைக்கத்தக்க அளவில் இப்படத்தில் த்ரில்லர் காட்சிகள் படு கச்சிதமாகத் திட்டமிட்டு படமாக்கப்பட்டிருப்பதாக உறுதியளித்திருக்கிறார். லோஹித், கதை மற்றும் திரைக்கதை அமைத்துள்ள இப்படம் கொல்கத்தாவில் நிகழ்ந்த ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டு வருகிறதாம்.

Related Article

புல்லட்டில் சென்று மகளைப் பள்ளியில் இறக்கி விட்டதைப் பெருமையாக உணர்கிறேன்: ஜோதிகா!

விக்ரம் பிரபு மகனுக்கு, பிரபாஸ் அனுப்பிய சர்ப்ரைஸ் கிஃப்ட்!

மோகன்லாலின் ‘ஜிமிக்கி, கம்மல்’ சேலஞ்சால் இணையத்தில் தொடர்ந்து வைரலாகிக் கொண்டிருக்கும் பாடல்!

சுதா கொங்கரா இயக்கிய இறுதிச் சுற்று திரைப்படத்துக்குக் கிடைத்த புதிய விருது!

நெட்டிஸன்கள் அதிகம் தேடிய தென்னிந்திய திரைப்பிரபலங்கள் லிஸ்ட்...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.