பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

கோவளம் கடற்கரையைக் குப்பையாக்கினார்களா? மணி ரத்னம் படக்குழு மீது குற்றச்சாட்டு!

கோவளம் கடலோரப் பகுதியில் படப்பிடிப்பு நடத்திய மணிரத்னம் படக்குழு, அப்பகுதியைக் குப்பையாக்கிவிட்டுச் சென்றதாகப் புகார் எழுந்துள்ளது... 

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 12:08 pm

எழில்

கோவளம் கடலோரப் பகுதியில் படப்பிடிப்பு நடத்திய மணிரத்னம் படக்குழு, அப்பகுதியைக் குப்பையாக்கிவிட்டுச் சென்றதாகப் புகார் எழுந்துள்ளது. 

மணி ரத்னம் இயக்கத்தில் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் 17-வது தயாரிப்பில், அரவிந்த் சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இசை: ஏ.ஆர்.ரஹ்மான். ஒளிப்பதிவு: சந்தோஷ் சிவன், படத்தொகுப்பு: ஸ்ரீகர் பிரசாத். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. 

கடந்த வாரம் சென்னைக்கு அருகே உள்ள கோவளம் கடற்கரையின் அருகே இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. விஜய் சேதுபதி, சிம்பு உள்ளிட்ட பல நடிகர்கள் இப்படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார்கள். பணிகள் முடிந்து படப்பிடிப்புக்குழுவினர் கிளம்பிச் சென்றபிறகு, படப்பிடிப்புக்குப் பயன்படுத்திய இடங்களைப் பார்வையிட்டவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். உடைந்த பாட்டில்கள் உள்ளிட்ட ஏராளமான குப்பைகள் அங்கிருந்துள்ளன. ஒரு காரின் கண்ணாடிகள் உடைந்து சிதறியுள்ளன. துப்பாக்கித் தோட்டக்களும் ஆங்காங்கே சிதறிக் கிடந்துள்ளன. இதனால் அப்பகுதிக்கு வந்த பலருக்கும் கண்ணாடிகள் கிழித்து காயங்கள் ஏற்பட்டுள்ளன. குப்பைகளைச் சுத்தம் செய்வதாகக் கூறியவர்கள் அதைச் செய்யாமல் விட்டதால் இதுபோன்ற ஒரு நிலை ஏற்பட்டுள்ளது.

இதைக் கண்ட சமூக ஆர்வலர்கள், படப்பிடிப்புக்குழுவினரிடம் தொடர்பு கொண்டு தகவல் தெரித்துள்ளார்கள். ஃபேஸ்புக்கில் தனக்கு வந்த புகாரையடுத்து, இனிமேல் இதுபோல் நடக்காது என்று உறுதியளித்துள்ளார் விஜய் சேதுபதி. ஆனாலும் படப்பிடிப்பினால் உண்டான குப்பைகளை அப்புறப்படுத்த யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று புகார்கள் எழுந்துள்ளன. சமீபத்தில் விஜய் - முருகதாஸ் கூட்டணியில் உருவாகி வரும் படத்துக்கும் இங்குப் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. அப்போது இதற்காகக் கட்டப்பட்ட அரங்கினால் ஏராளமான குப்பைகள் சேர்ந்துள்ளன. அவற்றை அப்புறப்படுத்தாமல் அப்படியே விட்டுவிட்டுச் சென்றுள்ளார்கள் என்கிற புகார்களும் தற்போது கூறப்படுகின்றன.  

ஊடகங்களில் இதுகுறித்த செய்திகள் வெளியானபிறகு தங்களுடைய படப்பிடிப்பினால் உண்டான குப்பைகளை அப்புறப்படுத்தி அந்த இடத்தைச் சுத்தம் செய்துதருவதாக மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் கூறியுள்ளது. எனினும் படப்பிடிப்புக்குப் பிறகு அந்த இடங்களை யாராவது அசுத்தமாக்கியிருந்தால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல. கோவளம் பகுதியில் படப்பிடிப்பு முடிந்தபிறகு 20 பேரைக் கொண்டு இடத்தைச் சுத்தமாக்கினோம் என்று மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் சார்பாக விளக்கம் அளித்துள்ளது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.