8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

அம்பானியின் ‘மகாபாரதத்தில்’ முக்கிய வேடத்தில் பாகுபலி! அழைப்பு விடுத்தார் அமீர்கான்!

முகேஷ் அம்பானியின் ‘மகாபாரதத்தில்’ அமீர்கான் ஏற்று நடிக்கவிருப்பது ஸ்ரீகிருஷ்ணன் கதாபாத்திரம் என்று தற்போது செய்திகள் வெளியாகியிருக்கின்றன. அது மட்டுமல்ல...

Published On :30 ஜனவரி 2024, 10:08 pm IST

1000 கோடி ரூபாய் செலவில் முகேஷ் அம்பானி தயாரிக்கவிருக்கும் ‘மகாபாரதம்’ பன்மொழித்திரைப்படத்தில் முக முக்கியமான கதாபாத்திரமொன்றில் நடிக்க பாகுபலி பிரபாஸுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார் இந்தி நடிகர் அமீர்கான். தற்போது தனது ‘தக்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தான்’ திரைப்படப் பணிகளை முடிக்கும் தறுவாயில் இருக்கும் அமீர்கான். அத்திரைப்படப் பணிகள் முடிந்ததும் அடுத்தபடியாக முகேஷ் அம்பானியின் தயாரிப்பில் துவக்கப்படவிருக்கும் ‘மகாபாரதம்’ திரைப்படப் பணிகளில் முழு வீச்சில் இறங்கவிருப்பதாக அமீர்கானின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்திய இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதத்தில் தன்னை மிகவும் கவர்ந்த கதாபாத்திரங்கள் என இருவரைச் சுட்டிக்காட்டியிருந்தார் அமீர்கான். அதில் ஒருவர் யாசோதையின் கிருஷ்ணன், மற்றொருவர் ராதேயனான கர்ணன். இந்த இரண்டு கதாபாத்திரங்களில் எதை அளித்தாலும் ஏற்று நடிக்கத் தனக்குச் சம்மதம் தான் என முன்பே தனது நேர்காணலொன்றில் வெளிப்படையாகக் கூறியிருந்தார் அமீர்கான்.

இதோ இப்போது முகேஷ் அம்பானியின் ‘மகாபாரதத்தில்’ அமீர்கான் ஏற்று நடிக்கவிருப்பது ஸ்ரீகிருஷ்ணன் கதாபாத்திரம் என்று தற்போது செய்திகள் வெளியாகியிருக்கின்றன. அது மட்டுமல்ல... மகாபாரதத்தில் மற்றெல்லா கதாபாத்திரங்களைக் காட்டிலும் பிரசித்தி பெற்ற கதாபாத்திரங்களில் ஒன்றான அர்ஜூனன் கதாபாத்திரத்தில் நடிக்க பாகுபலி பிரபாஸைப் பரிந்துரைத்திருப்பதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. இவர்களைத் தவிர இத்திரைப்படத்தில் மிக மிக முக்கியமான திரெளபதி வேடத்தில் நடிக்கவிருப்பது பத்மாவத் திரைப்படப் புகழ் தீபிகா படுகோன் என்று கூறப்படுகிறது முதலில் இத்திரைப்படம் கோரும் நேரம் மற்றும் பொருட் செலவை தம்மால் தாங்க இயலாது, மேலும் மக்கள் நன்கறிந்ததோர் இதிகாசத்தைப் படமாக்கும் போது அதற்கு பல கட்ட ஆராய்ச்சிகள் தேவை எனக்கருதி இத்திரைப்பட நோக்கத்தையே கைவிட்டார் அமீர்கான் எனக்கூறப்பட்டது. ஆயினும் தற்போது தனது ’தக்ஸ் ஆஃப் இந்துஸ்தான் திரைப்பட வேலைகள் முடியும் பட்சத்தில் இருப்பதால் அடுத்தகட்டமாக அம்பானியின் ‘மகாபாரதம்’ திரைப்படத்திற்கான முன்னேற்பாடுகளில் ஏற்கனவே இறங்கி விட்டார் அமீர்கான் என்று பாலிவுட் பட்சி கூறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.