நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

ரஜினிகாந்தை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் மு.க. அழகிரி!

ரஜினி தனது அரசியல் முடிவைத் தெரிவிப்பதற்கு முன்பாகவே, அவரது அரசியல் பிரவேஷத்தை வரவேற்றவர்களுள் மு.க அழகிரியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

News image
Updated On :4 ஜனவரி 2018, 11:29 am IST

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க அழகிரி நேற்று தன் தன் தந்தையைச் சந்தித்துப் பேச கோபாலபுரம் வந்து சென்றார். தந்தையைச் சந்தித்த பிறகு ஊடகத்தினரைச் சந்தித்த மு.க அழகிரி, தந்தைக்கு புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்து ஆசி பெற்றுச் செல்ல வந்ததாகவும், தனது தந்தை தற்போது நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகவும் தகவல் அளித்தார். அப்போது அவரிடம், ரஜினியின் அரசியல் பிரவேஷம் பற்றியும் கேள்வி எழுப்பப் பட்டது.

அதற்கு பதிலளித்த மு.க அழகிரி, ரஜினியின் அரசியல் பிரவேஷத்தைத் தான் வரவேற்பதாகவும், அவரை நேரில் சந்தித்து வாழ்த்து கூற அனுமதி கேட்டிருப்பதாகவும், அனுமதி கிடைத்ததும் விரைவில் ரஜினியைச் சந்திக்கவிருப்பதாகவும் தெரிவித்தார்.

ரஜினி தனது அரசியல் முடிவைத் தெரிவிப்பதற்கு முன்பாகவே, அவரது அரசியல் பிரவேஷத்தை வரவேற்றவர்களுள் மு.க அழகிரியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சூழ்நிலையில் அழகிரி, ரஜினியை நேரில் சந்தித்துப் பேச அனுமதி கேட்டிருப்பது அரசியல் ஆதரவு ரீதியிலான மாற்றங்களை ஏற்படுத்தக் கூடுமா என்ற எதிர்பார்ப்பை அவர்கள் இருவரது ஆதரவாளர்களிடையே எழுப்பியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.