28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

திருமணத்துக்கு பின் நடிக்கும் நடிகைகள் பட்டியலில் இணைந்துள்ள நடிகை இவர்தான்!

முன்பு இந்திய திரையுலகில் திருமணத்துக்குப் பின் நடிக்க வரும் நடிகைகளுக்கெனவே தனி ரோல்கள் காத்திருக்கும்.

News image
Updated On :18 ஜூன் 2018, 6:22 am

சினேகா

முன்பு இந்திய திரையுலகில் திருமணத்துக்குப் பின் நடிக்க வரும் நடிகைகளுக்கெனவே தனி ரோல்கள் காத்திருக்கும். அக்கா, அண்ணி, அம்மா, வில்லி என்று அந்தப் பட்டியல் நீளும். சில நடிகைகள் பாட்டியாகக் கூட நடித்துள்ளனர். ஆனால் தற்போது அந்த நிலை மாறி, திருமணத்துக்குப் பின்பும் தங்களுடைய திரை வாழ்க்கையை தக்க வைத்துக் கொள்கின்றனர் கதாநாயகிகள்.

Story image

பாலிவுட்டில் ஐஸ்வர்யா ராய், கஜோல், கரீனா கபூர், வித்யா பாலன், ராணி முகர்ஜி, ராதிகா ஆப்தே, அனுஷ்கா ஷர்மா உள்ளிட்ட பலர் வெற்றிகரமாக தொடகிறார்கள்.

Story image

தென்னிந்திய நடிகைகளைப் பொருத்தவரை அமலா பால், சமந்தா இருவரும் திருமணத்துக்கு பின்னரும் அதே ஸ்டார் வேல்யூவுடன் நடித்து வருகிறார்கள். கணவருடனான கருத்து வேறுபாட்டால் அமலா பால் விவாகரத்துப் பெற்று தொடர்ந்து தமிழ் மலையாளப் படங்களில் நடித்து வருகிறார்.

Story image

சமந்தாவைப் பொருத்த வரை தெலுங்குத் திரை உலகம் அவரை கொண்டாடி வருகிறது. தமிழிலும் அண்மையில் வெளிவந்த இரும்புத் திரை நல்ல பெயர் எடுத்துத் தந்துள்ளது. சூப்பர் டீலக்ஸ், சீமராஜா என்று தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார்.

Story image

இந்தப் பட்டியலில் தற்போது இணைந்துள்ளார் நஸ்ரியா. நேரம், ராஜா ராணி, நையாண்டி உள்ளிட்ட சில படங்களில் நடித்த நஸ்ரியா மலையாள நடிகர் ஃபகத் ஃபாசிலை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

Story image

பெங்களூரு டேஸ் பட ஷூட்டிங் போதுதான் நஸ்ரியா ஃபகத் பாசில் இருவருக்குமிடையே காதல் மலர்ந்தது. படத்தின் இயக்குனர் அஞ்சலி மேனன் ஃபகத் பாசிலிடம் நஸ்ரியா தொடர்ந்து நடிப்பாரா என்று கேட்டுள்ளார். அதற்கு ஃபகத் அது நஸ்ரியாவின் விருப்பம் என்று கூறியிருந்தார். நஸ்ரியா நல்ல நடிகை அவர் திரைப்படங்கள் தொடர்ந்து நடிப்பதை விரும்புகிறேன்...ஏன் நீங்களே உங்கள் அடுத்த படத்திலேயே நடிக்க வையுங்களேன்’ என்றும் ஃபகத் பகடி செய்துள்ளார்.

Story image

அப்போது விளையாட்டாக ஃபகத் கூறியதை  மூன்று ஆண்டுகள் கழித்து அஞ்சலி மேனன் நிறைவேற்றியுள்ளார். அவர் தற்போது இயக்கும் மலையாளப் படத்தில் நஸ்ரியாவை கதாநாயகியாக நடிக்க வைத்துள்ளார். 'கூடே’ என்ற இந்தப் படத்தில் பிருத்விராஜ் கதாநாயகனாக நடித்துள்ளார். பார்வதி இன்னொரு கதாநாயகியாக நடிக்கிறார். ஹாப்பி ஹர்னி என்ற மராத்தியப் படத்தின் ரீமேக்தான் இப்படம். தற்போது முடிவடையும் நிலையில் உள்ளது.

Story image

மலையாளப் படங்களைத் தொடர்ந்து தமிழிலும் நடிக்க கதைகள் கேட்டு வருகிறார். தனக்கு பொருத்தமான வேடங்களில் நடிப்பதை விரும்புவதாகக் கூறியிருக்கிறார் நஸ்ரியா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.