பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

'மெர்சலாக்கும் விஜய்'- சிறந்த சர்வதேச நடிகராக தேர்வு!

2018-ம் ஆண்டுக்கான சர்வதேச சாதனைக்கான அங்கீகார விருதுகள் (ஐஏஆர்ஏ) ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டன. 

Published On :

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் - மெர்சல். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இப்படத்தில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு நகைச்சுவை நடிகர் வடிவேலு நடித்துள்ளார். இயக்குநர், நடிகர் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்தார். சமந்தா, காஜல் அகர்வால் மற்றும் நித்யா மேனன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். 

முதன் முறையாக 3 கதாப்பாத்திரத்தில் நடிகர் விஜய் இப்படத்தில் நடித்துள்ளார். பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியான மெர்சல் படத்தின் வசூல் ரூ. 250 கோடியைத் தாண்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, 2018-ம் ஆண்டுக்கான லண்டனைச் சேர்ந்த சர்வதேச சாதனைக்கான அங்கீகார விருதுகள் (ஐஏஆர்ஏ) விருதுப் பட்டியல்கள் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டன.

2014 முதல் வழங்கப்பட்டு வரும் இந்தச் சர்வதேச விருதுப் பரிந்துரைப் பட்டியல்களில், சிறந்த நடிகர் மற்றும் சிறந்த சர்வதேச நடிகர் என இரு பரிந்துரைப் பட்டியல்களில் மெர்சல் படத்தில் நடித்ததற்காக விஜய் இடம்பெற்றார். 

Story image

இந்நிலையில், சிறந்த சர்வதேச நடிகருக்கான ஐஏஆர்ஏ என்கிற சர்வதேச விருதை மெர்சல் திரைப்படத்தில் நடித்ததற்காக விஜய் பெற்றார்.

ரசிகர்களின் வாக்குகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் இந்த சர்வதேச விருது தமிழ் திரைப்படத்தில் நடித்ததற்காக விஜய்க்கு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.