தனது திரைப்படங்கள் வாயிலாக இந்தியாவுக்கும், ஐரோப்பாவுக்கும் இணைப்புப் பாலமாகச் செயல்பட்டதற்கு அமிதாப் பச்சனுக்கு கெளரவ விருது!
வெள்ளியன்று இரவு அமிதாப் பச்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் சில புகைப்படங்களைப் பதிவேற்றியிருந்தார். அந்த புகைப்படங்களில் அமிதாப்புடன் இருந்து அவருக்கு விருது வழங்கியவர் இந்தியாவுக்கான அரோப்பியத் தூதரான தோமஸ் கோஸ்லோவ்ஸ்கி. ஒரு திரைப்பட நடிகராக தனது தேர்ந்த பண்பட்ட நடிப்பின் மூலமாகத் தொடர்ந்து இந்தியாவுக்கும், ஐரோப்பாவுக்குமான இணைப்புப் பாலமாக அமிதாப் செயல்பட்டு வருவதால் அவருக்கு இந்திய, ஐரோப்பிய இணைப்புப் பால விருது வழங்கி கெளரவித்துள்ளதாக ஐரோப்பியத் தூதர் தெரிவித்துள்ளார்.

அமிதாப்பின் திரைப்படங்கள் அனைத்துமே ஐரோப்பியர்களை மிக நெருக்கமாகக் கவரும்படியான கதையம்சம் கொண்டவையாக இருப்பதோடு இந்தியக் கலாச்சாரத்தை ஐரோப்பியர்கள் மிக எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையிலும் இருப்பதால் அங்குள்ளவர்களால் பெரிதும் ரசிக்கப்படுகின்றன. எனவே அமிதாப்புக்கு இந்த விருதை வழங்குவதில் பெருமை கொள்வதாக ஐரோப்பிய தூதரக அதிகாரி தெரிவித்துள்ளார். நேற்று மே 18 ஆம் தேதி ஐரோப்பாவுக்கான இந்தியத் தூதரக அலுவலகத்தில் ‘ஈரோப் டே 2018’ விழா அனுசரிக்கப்பட்டது. அந்த விழாவில் அமிதாப்புக்கு இந்த கெளரவ விருது வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டது.
இதற்கிடையே பிக் பி தற்போது அமீர்கானுடன் இணைந்து நடித்து வெளிவரவிருக்கும் தனது புதிய திரைப்படமான ;தக்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தான்’ மற்றும் சிரஞ்சீவியின் ‘சைரா நரசிம்ம ரெட்டி’ உள்ளிட்ட திரைப்படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார்.
Related Article
‘பர்மணு’ ஜான் ஆப்ரஹாமின் புதிய திரைப்படம் தேச பக்தியை வளர்க்குமா?
மெஹந்தியுடன் கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்ற புது மணப்பெண் சோனம் கபூர் (படங்கள்)
மாரி 2 படத்தில் தனுஷுடன் சாய் பல்லவி ஆட்டோ ட்ரைவராக நடிக்கிறாரா?
‘நான் ஈ’ புகழ் நானி ஏற்று நடத்தவிருக்கும் தெலுங்கு பிக்பாஸ் 2 போட்டியாளர்கள் லிஸ்ட்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மத்திய அமைச்சர் மகன் மீது அவதூறு: வருத்தம் தெரிவித்த ராகுல் காந்தி!

மகளிர் டி20 உலகக் கோப்பை: முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து!

இன்றைய செய்திகள் ஜூன் 25 - நேரலை

திருவள்ளூர் அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!
விடியோக்கள்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani

UN Kannan Interview | விஜய், உதயநிதி மோதல் தொடர்ந்தால்...? | CM Vijay | TVK | Udhayanidhi | DMK

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP



