அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன் திருப்பரங்குன்றத்தில் உடனடியாக தீபம் ஏற்ற முடியாது! தமிழக அரசு மேல்முறையீடு! திருப்பரங்குன்றத்தில் உடனடியாக தீபம் ஏற்ற முடியாது! தமிழக அரசு மேல்முறையீடு! முதல்வர் விஜய் பேசுவது முக்கியமா? செயல்படுவது முக்கியமா? எஸ்.ஏ. சந்திரசேகர் கேள்விபிறந்த நாளில் முதல்வருக்கு பிரேமலதா கோரிக்கை! அவையில் சிரிப்பலை! முதல்வர் மிகுந்த வேதனை அடைந்தார்! வாயு கசிவு விபத்து பற்றி பேரவையில் அமைச்சர் விளக்கம்!
/

விஜய் சேதுபதி நடித்துள்ள 96 படத்தின் சிறப்புக் காட்சி ரத்தானதற்கு விஷால் காரணமா?

காலையிலேயே 96 படத்தின் முதல் காட்சியைப் பார்க்க வந்த ரசிகர்கள் கடுப்பானார்கள்.... 

News image
Updated On :4 அக்டோபர் 2018, 4:20 pm IST

விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் சி. பிரேம் குமார் இயக்கியுள்ள படம் - 96. இந்தப் படம் இன்று வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் அதிகாலை 5 மணி சிறப்புக் காட்சி கேடிஎம் பிரச்னை காரணமாக ரத்தானது. இதனால் காலையிலேயே 96 படத்தின் முதல் காட்சியைப் பார்க்க வந்த ரசிகர்கள் கடுப்பானார்கள். பிரச்னை காலை 10 மணி அளவில் சரிசெய்யப்பட்டு பிறகு படம் தமிழகமெங்கும் திரையிடப்பட்டது. 

96 படத்தயாரிப்பாளர் மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தைச் சேர்ந்த நந்தகோபால், விஷால் நடித்த கத்திச்சண்டை படத்தைத் தயாரித்தார். இதில் விஷால் மற்றும் ஃபைனான்சியர்களுக்கு பணப்பாக்கி வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து தனக்கான சம்பளப் பாக்கியைத் திருப்பிக் கொடுத்த பிறகே 96 படத்தைத் திரையிடவேண்டும் என்று விஷால் தரப்பில் அழுத்தம் கொடுத்ததால் காலைக்காட்சி ரத்தானதாகவும் கூறப்படுகிறது. இதன்பிறகு 96 படக்கதாநாயகன் விஜய் சேதுபதி இப்பிரச்னையில் தலையிட்டு தன்னுடைய சம்பளம் ரூ. 3 கோடி மற்றும் கூடுதலாக ரூ. 1 கோடி என  ரூ. 4 கோடியை அளித்த பிறகே பிரச்னை முடிவுக்கு வந்து படம் திரையிடப்பட்டது. 

இந்தப் பிரச்னை குறித்து தயாரிப்பாளர் சதீஷ் குமார் வெளியிட்டுள்ள ஆடியோ அறிக்கையில் கூறியதாவது: நந்தகோபாலுக்கும் விஷாலுக்கும் ஏற்பட்ட பிரச்னையால் 96 படத்தின் காலைக்காட்சி திரையிடப்படவில்லை. அப்படி ஒரு பிரச்னை இருந்தால் மாற்று வழியை விஷால் யோசித்திருக்க வேண்டும். இத்தனைக்கும் விஜய் சேதுபதி ரூ. 1 கோடி தருவதாகக் கூறியுள்ளார். தயாரிப்பாளர் சங்கத் தலைவர் படத்தை வெளியிடத் தடையாக இருப்பது அழகல்ல. அதேபோல நந்தகோபாலிடம் வெற்றுத்தாளில் கையெழுத்து வாங்கிக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. விஷாலின் இந்தச் செயல் கண்டனத்துக்கு உரியது. தனது நிலையை விஷால் தெளிவுப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். 

எனினும் தயாரிப்பாளர் சதீஷ் குமாரின் குற்றச்சாட்டை விஷால் தரப்பு இதை மறுத்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.