விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் சி. பிரேம் குமார் இயக்கியுள்ள படம் - 96. இந்தப் படம் இன்று வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் அதிகாலை 5 மணி சிறப்புக் காட்சி கேடிஎம் பிரச்னை காரணமாக ரத்தானது. இதனால் காலையிலேயே 96 படத்தின் முதல் காட்சியைப் பார்க்க வந்த ரசிகர்கள் கடுப்பானார்கள். பிரச்னை காலை 10 மணி அளவில் சரிசெய்யப்பட்டு பிறகு படம் தமிழகமெங்கும் திரையிடப்பட்டது.
96 படத்தயாரிப்பாளர் மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தைச் சேர்ந்த நந்தகோபால், விஷால் நடித்த கத்திச்சண்டை படத்தைத் தயாரித்தார். இதில் விஷால் மற்றும் ஃபைனான்சியர்களுக்கு பணப்பாக்கி வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து தனக்கான சம்பளப் பாக்கியைத் திருப்பிக் கொடுத்த பிறகே 96 படத்தைத் திரையிடவேண்டும் என்று விஷால் தரப்பில் அழுத்தம் கொடுத்ததால் காலைக்காட்சி ரத்தானதாகவும் கூறப்படுகிறது. இதன்பிறகு 96 படக்கதாநாயகன் விஜய் சேதுபதி இப்பிரச்னையில் தலையிட்டு தன்னுடைய சம்பளம் ரூ. 3 கோடி மற்றும் கூடுதலாக ரூ. 1 கோடி என ரூ. 4 கோடியை அளித்த பிறகே பிரச்னை முடிவுக்கு வந்து படம் திரையிடப்பட்டது.
இந்தப் பிரச்னை குறித்து தயாரிப்பாளர் சதீஷ் குமார் வெளியிட்டுள்ள ஆடியோ அறிக்கையில் கூறியதாவது: நந்தகோபாலுக்கும் விஷாலுக்கும் ஏற்பட்ட பிரச்னையால் 96 படத்தின் காலைக்காட்சி திரையிடப்படவில்லை. அப்படி ஒரு பிரச்னை இருந்தால் மாற்று வழியை விஷால் யோசித்திருக்க வேண்டும். இத்தனைக்கும் விஜய் சேதுபதி ரூ. 1 கோடி தருவதாகக் கூறியுள்ளார். தயாரிப்பாளர் சங்கத் தலைவர் படத்தை வெளியிடத் தடையாக இருப்பது அழகல்ல. அதேபோல நந்தகோபாலிடம் வெற்றுத்தாளில் கையெழுத்து வாங்கிக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. விஷாலின் இந்தச் செயல் கண்டனத்துக்கு உரியது. தனது நிலையை விஷால் தெளிவுப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
எனினும் தயாரிப்பாளர் சதீஷ் குமாரின் குற்றச்சாட்டை விஷால் தரப்பு இதை மறுத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இன்றைய தமிழ்நாடு சட்டப்பேரவை 2026 செய்திகள் - நேரலை!

தவெக அரசு ‘டேக் டைவர்ஷன்’அரசியலை மேற்கொள்ள வேண்டாம்: முன்னாள் அமைச்சர் துரைமுருகன்
காவிரி நீர் விவகாரத்தில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன? அமைச்சர் ஆனந்த் விளக்கம்
மேக்கேதாட்டு அணையால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன? விவரித்த சௌமியா அன்புமணி
விடியோக்கள்
Ravindran Duraisamy interview | விஜய் நினைத்தது நடக்கவில்லை | CM Vijay | TVK | Udhayanidhi Stalin



