நகைச்சுவை எழுத்தாளரும் நடிகருமான கிரேஸி மோகன் மாரடைப்பு காரணமாகக் கவலைக்கிடமாக உள்ளார்.
இன்று காலை 11 மணி அளவில் கிரேஸி மோகனுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக சென்னையிலுள்ள காவேரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். கவலைக்கிடமான நிலையில், அவருக்குத் தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.