தமிழில் சூப்பர் ஹிட் அடித்த காஞ்சனா 1 திரைப்படத்தை இந்தியில் அக்ஷய் குமார் நடிப்பில், ராகவா லாரன்ஸ் இயக்கப்போவதாக சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளிவந்தது. தமிழில் சரத்குமார், திருநங்கையாக நடித்து பட்டையைக் கிளப்பிய திரைப்படம் அது. அதில் ராகவா லாரன்ஸ் கதாநாயகன். அவரது கதாபாத்திரத்தை ஹிந்தியில் அக்ஷய் குமார் ஏற்று நடிக்க, அத்திரைப்படம் ‘லஷ்மி பாம்ப்’ என்று பெயரிடப்பட்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியாகி விட்டது. அந்த நிலையில் தற்போது அத்திரைப்படத்தில் இருந்து தான் விலகி விட்டதாக இயக்குனர் ராகவா லாரன்ஸ் அறிவித்துள்ளார்.
அதற்கு காரணமாக அவர் சுட்டுவது;
ஹிந்தி தயாரிப்புக் குழுவினர், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்டிருக்கிறார்கள். அதைப் பற்றி இயக்குனரான தனக்கு தகவலேதும் இல்லை. யாரோ மூன்றாம் நபர் சொல்லித்தான் அதை நான் அறிந்து கொள்ள வேண்டியதாயிருந்தது. அத்துடன், தான் இயக்கவிருக்கும் திரைப்படமான அதில், தனக்கே தெரியாமல், தனக்குப் பிடிக்காத ஒரு டேஸ்டில் ஃபர்ஸ்ட் லுக் வெளியானதை தன்னால் சகித்துக் கொள்ள முடியாது என்றும் ராகவா லாரன்ஸ் தனது சுட்டுரைப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். எதை வேண்டுமானாலும் சகித்துக் கொள்ளலாம், ஆனால், சுயமரியாதைக்கு பங்கம் வரத்தக்க அளவிலான எந்த ஒரு அவமரியாதையையும் தன்னால் சகித்துக் கொள்ளவே முடியாது என்றும் ராகவா லாரன்ஸ் ’லஷ்மி பாம்ப்’ படத்தில் இருந்து தனது விலகலுக்கு விளக்கம் அளித்துள்ளார். தவிர, ஒரு நடிகராக அக்ஷய் குமார் மீது தனக்கு மிகப்பெரிய மரியாதை உண்டு என்றும், படத்திலிருந்து தனது விலகலை நேரில் சென்று அக்ஷய் குமாரிடம் தெரிவித்து விட்டு படத்தின் ஸ்கிரிப்டையும் அவரிடம் ஒப்படைத்து விட்டு வரவிருப்பதாகவும் ராகவா லாரன்ஸ் தனது சுட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.
மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் புதிய சிக்கல்கள்!
‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ விரைவில் தொடங்கும்: இயக்குநர் சிம்பு தேவன் நம்பிக்கை!
கேன்ஸ் விழாவில் ஜொலித்த ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, கங்கனா, ஹியூமா... (படங்கள்)
தேர்தலுக்குப் பிறகு 'இந்தியன்’ ஆகிறாரா கமல்?
ராஜூ முருகனின் ஜிப்ஸி: டிரெய்லர் வெளியீடு!